Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Wednesday, September 03, 2003
தாய்மனமும் சேய்மனமும்
சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.
சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.
புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.
சந்திரவதனா - யேர்மனி - 11.6.1999
‹
›
Home
View web version