பேரக்குழந்தையின் வரவு, மகனின் திருமணம் என நேரத்தோடு நாட்களும் அசுர வேகத்தில் பறக்கின்றன.
இன்று யாழ்கருத்துக்களத்தில் கவிஞர் நாவண்ணனின் கரும்புலி காவியம் பற்றி சீலன் எழுதியருப்பதைப் பார்த்த போதுதான்
கரும்புலி காவியம் பற்றிய எனது கருத்தை தருவதாக கவிஞர் நாவண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டேன் என்பதே ஞாபகத்தில் வந்திருக்கிறது.
லண்டன் பயண அனுபவம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
அவைகள் கூட எனக்குள்ளே மட்டுமாகச் சிறகடித்து ஓய்ந்து போயிருக்கின்றன.
இப்படி எத்தனையோ விடயங்கள்..