எதிர்பார்த்தது போலவே வெங்கட்ரமணியின் வலைப்பின்னல் பிரமாதமாகவே இருந்தது.
Tamil Bloggers' Journal இல் மற்றைய வலைப்பூக்களில் சிந்தியிருக்கும் மற்றையவர்களின் எண்ணங்கள் மட்டும் என்றில்லாது வேறும் பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. சுலபமாகப் பலதை அறிய முடிகிறது.
க்ருபா நன்றாகத்தான் பின்னியிருந்தார்.. ஏதோ.. சுவாரஸ்யமான கதை படிப்பது போன்ற உணர்வு அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது.... தற்போது வினோபா கார்த்திக். எடுத்த எடுப்பிலேயே நிறைய எழுதி விட்டார் போலுள்ளது.
சரி... இந்தளவு கணினியோடு இணைந்து விட்டோம். சுரதாவின் எழுத்துருமாற்றி பல வகைகளிலும் கை கொடுக்க யூனிக்கோட் அது இது என்று அசத்துகிறோம். ஆனாலும் மலேசியா பற்றிய தகவல்களை நாம் மிகவும் சுலபமான முறையில் அறிந்து கொள்ளும் படியாக சுபா தமிழில் ஒரு இல்லம் அமைக்க அதைக் கண்டு மகிழ்நத நான் அதற்கு வாழ்த்துத் தெரிவிக்க.. சுபாவுக்கு அந்த எழுத்தை வாசிக்க முடியவில்லையாம்.
மாலனின் பக்கத்துக்குச் சென்றால் ----ஷியச ஷ'டியஷ'ந3ஷ'டி8 ஷ'யடிஷ'ய8ஷ'உ1ஷ'டிநஷ'ய2இ ஷ'ய6ஷ'உ0ஷ'ய1ஷ'ன5ஷ'உ7ஷ'ய1ஷ'டிநஷ'ய1ஷ'உ3 ஷ'ன3ஷ'கனஷ'ய7ஷ'உ9ஷ'கஉஷ'உ8ஷ'க5இ ஷ'உ1ஷ'டிநஷ'நநஷ'டியஷ'ய1ஷ'க7ஷ'உ0ஷ'ய2ஷ'கனஷ'ய8ஷ'உ1 ஷ'கநஷ'உ5ஷ'கஉஷ'ய8ஷ'உ8 ஷ'உ5ஷ'ய2ஷ'டிஉஷ'உ5ஷ'ய1 ஷ'டி4ஷ'ன5 ஷ'ய7ஷ'டி8ஷ'ய1ஷ'உ2ஷ'ய2ஷ'க8 ஷ'ன3ஷ'நஉஷ'டி8ஷ'ய2ஷ'உ2ஷ'க5?.---- இப்படித்தான் தெரிகின்றன.
சுரதாவின் எழுத்துருமாற்றி கூட இதை வாசிக்கும் படியாக மாற்ற மறுக்கிறது.
ஏன் இந்தச் சிக்கல்கள்......???
இதன் நடுவே முகுந்தராஜ் கடலை மிட்டாய் என்றொரு எழுத்துரு மென்பொருளை கணினியில் போட்டுள்ளாராம்.