Thursday, June 24, 2004
வலைவலம் 24.6.2004
எனது எழுத்துக்கள் கதை, கட்டுரை, கவிதை... இலக்கியம் என்ற கோட்பாடுகளுக்குள் அடங்குகின்றனவோ இல்லையோ.... அது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், எதுவானாலும் என் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன்.
அதை ரசிக்கக் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. புதிதாக வலைப்பதிய ஆரம்பித்திருக்கும் நிர்வியா எனது எழுத்துக்குத் தான் அடிமையாம். அதைத் தனது வலைப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்க்க நேர்ந்த போது மனசு ஒரு தரம் சந்தோசத்தில் ஜில்லிட்டது. நன்றி நிர்வியா.
இதே கருத்துப்படத்தான் ஒரு தரம் திவாகரனும் தனது பதிவில் எழுதினார்.
அவரை ஏனோ நீண்ட நாட்களாகக் காணவில்லை.
அவர் முற்றத்தில் நிலா அநாதரவாய்க் காய்கிறது.
விவசாயம் பார்க்க என்று போன நாட்டாண்மை போனது போனதுதான்.
திரும்பி வரக் காணோம்.
வலைப்பூக்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியர் என்று வருவதில்
ஒவ்வொரு வாரமும் அதன் சாராம்சம் வேவ்வேறு விதமாக அமைகிறது.
இம்முறை கொள்ளிடம் வாசன்பிள்ளை தன் கோணத்திலான தனது ரசனையுடனும் ஆர்வத்துடனும் கூடிய விடயங்களைத் தந்து கொண்டிருக்கிறார். வாசித்துப் பாருங்கள். interesting.
கல்கியில் வெளியாகி, இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற ஒரு விநாடியும் ஒரு யுகமும் கதையை துகள்கள் சத்யராஜ்குமார் கொஞ்சம் கொஞ்சமாகத் தர உள்ளார். வாசித்துப் பாருங்கள்.