Wednesday, July 07, 2004

ஆச்சரியமான சந்தோசங்கள்


கரிகாலனின் மனவெளியிலிருந்து...
சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும் பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.இரண்டாவது பக்கத்தில் புகழ்பெற்ற தமிழர்கள் எனும் தலைப்பில் ஒரு தளத்தினையும் காணமுடிந்தது.தளத்தினுள் புகழ்பெற்றதமிழர்கள் எனும் தலைப்பின் கீழ் பாரதியார்,கவிஞர் கண்ணதாசன், பெரியார்,எம்.ஜி.ஆர்,வே.பிரபாகரன் போன்ற பலருடைய வாழ்க்கைவரலாறுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.சிலருடைய விபரங்கள் மேலோட்டமாக உள்ளது. தளத்தில் பல விடயங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சிவசோதி சதீஷன் என்னும் ஒரு மாணவனால் இந்த தளம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக விபரம் உள்ளது. புகழ் பெற்ற தமிழர்கள் தொடர்பாக விபரங்கள் தருமாறு வேண்டுகோளும் காணப்படுகிறது.ஒரு மாணவனால் இப்படி ஒரு தளம் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.பல குறைகள் காணப்படினும் கூட.

கரிகாலனுக்கு தோன்றியது போன்றதான உணர்வுகள் சில சமயங்களில் எனக்குள்ளும் தோன்றியுள்ளன.

இளைஞர்களின் இப்படியான முயற்சிகள் ஆச்சரியமான சந்தோசங்கள்.
இந்த வகையில் ஈழநாதனின் முயற்சியும் அவரின் வயதையும் மீறிய எழுத்தின்
முதிர்ச்சியும் கூட எனக்கு மிகுந்த ஆச்சரியமே!

இவர் போல இளைஞன் எனப் புனைபெயர் கொண்ட சஞ்சீவ்காந்தும் வயதில் மிக இளையவர்.
யாழ்கருத்துக்களத்தில் ஏற்பட்ட பல கருத்து மோதல்களின் போது இவர் விடுத்த சிந்தனை பூர்வமான கருத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.