Thursday, July 15, 2004

வலைவலம் - 15.7.2004


A 5-year-old boy cries as his father is pulled from Leonard Pond yesterday afternoon. Framingham Police Officer Mike Degnan, right, and the boy's grandfather try to console him. (Staff photo by Bill Thompson)
மரணத்தை வென்ற துயரத்தை
இந்த மானுடர் சந்தித்திருப்பாரோ...?
வாழ்வை முடித்து விட்ட ஒரு இனியவனின் கதை
இவன் குடும்பத்தில் துயரம் இனி ஒரு தொடர்கதை

பூவினால் பூத்தது. நாங்கள் புலத்தில் தமிழர்கள் ஏன் தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுகிறார்கள் என்று ஆராயும் போது, பொறாமைப் பட வைக்கிற மாதிரி வலைப்பூ நண்பர்கள் புது அப்பா மெய்யப்பன், கீழக்கரைக்குப் புதுசா வந்த இரமணீதரன், பதிவுப் புயல் (காசா பணமா ஒரு பட்டத்தை நீங்களும் வச்சுக்கங்க பாலா) பாஸ்டன் பாலாஜி, வம்புணி சித்தர் கார்த்திக்ராமாஸ், அப்புறம் அமைதியான சுந்தரவடிவேல் எல்லாரும் சந்தித்திருக்கிறார்கள்.
கூடித்தான் வாழ வேண்டும் என்று சொல்லி கிட்டக் கிட்ட இருந்து கிண்டுப் படுவதை விட, கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பதற்கமைய தள்ளித் தள்ளி இருந்து கொண்டு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கோ ஒரு இடத்தில் இப்படிக் கூடிச் சந்தித்துக் கொள்வது உண்மையிலேயே இன்பமான பொழுது.