Tuesday, July 20, 2004

எவ்வளவு பணம் கொடுக்கிறாய்?


முன்னர் தாயகத்தில் இருந்த காலத்தில் எனது பெயர் ஏதாவது சில ஆக்கங்களின் மூலம் தினமும் குறைந்தது மூன்று நான்கு தடவைகளாவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிக்கும்.

இதை வைத்து எனக்கு வரும் கடிதங்கள் ஏராளம். இவைகளில் பாராட்டுக்கள் ஒரு புறம் இருக்க, மிகவும் அநாகரீகமாகத் திட்டித் தீர்ப்பவையும் இருக்கும்.

அனேகமானோர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கை ஒவிபரப்புக் கூட்டுத்தான அறிவிப்பாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து உங்கள் பெயரை வானொலிலியில் வர வைக்கிறீர்கள் என்பதாகவே இருக்கும்.

அவர்கள்தான் முகம் தெரியாதவர்கள். பரவாயில்லை என்று விட்டு விட்டேன். ஒரு தரம் என்னோடு க.பொ.த உயர்தரம் வரை படித்த ஒரு நண்பியிடம் இருந்து வந்தது. அவள் அப்போது கொழும்பில் கடமையில் இருந்தாள். எத்தனையோ ஆக்கங்களை எழுதிப் போட்டாளாம். ஒன்றுமே ஒலிபரப்பாகவில்லையாம். அவளும் இப்படியான சில
எவ்வளவு பணம் கொடுக்கிறாய்?
எந்த அறிவிப்பாளர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?

போன்ற கேள்விகளுடன் கடிதமெழுதினாள்.
நான் இன்றுவரை அவளுக்குப் பதில் எழுதவே இல்லை.
ஆனாலும் அடிக்கடி இந்தக் கேள்விகள் என் நினைவுகளில் வந்து போகும்.

இன்று சத்யராஜ்குமார் வலைப்பூக்களில்,...
எழுத்துலகத்துடனான இப்படியான மூட நம்பிக்கைகளைத் தொட்டிருக்கிறார்.
எனக்குத் திருப்தியாக இருக்கிறது.