Thursday, August 05, 2004

வலைவலம் 5.8.2004


துகள்கள் சத்யராஜ்குமாரின் பிழைப்பு (கொஞ்சம் நியம் கொஞ்சம் கதை) சூரியன்.கொம் மிலும் பதியப் பட்டுள்ளது. இவரது என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது.

ஜெயந்தியின் ஆக்கங்களையும் பல இடங்களில் காணக் கூடியதாகவுள்ளது. தமிழ் ஓவியத்தில் இவரது சுயம் சிறுகதை வந்துள்ளது. இம்மாத திசைகளும் வெளிவந்து விட்டது. அதில வந்திருக்கம் ஜெயந்தியின் ஈரம் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.
சிங்கப்பூரின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பார்த்து வியந்த கதாநாயகி ஒரு தரம் சட்டத்தால் தண்டிக்கப் பட்ட போது தான் மதித்த சட்டமும், ஒழுங்கும் மனிதநேயமற்றதாக இருப்பதைக் கண்டு மனமுடைந்து போகிறாள். இது கதையின் கரு. அதை சிங்கப்பூர் வாழ்வோடு கலந்து சொல்வது நன்றாக இருக்கிறது.

ஐரோப்பாவில் 2 தாலி அணியும் கலாச்சாரமும் இருக்கிறதே.
வீட்டில் ஒரு தாலியும் வெளி இடங்களுக்கு போகும் போது அணிந்து கொண்டு தங்கள் அந்தஸ்தை காட்டுவதற்காக 100 அல்லது 150 பவுணில் இன்னொரு தாலியும் வைத்திருக்கின்றார்களே. இது தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதிக்கவில்லையா? திவாகரன் கேட்கிறார் பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.