Saturday, August 07, 2004

Troya


இவ்வார வலைப்பூ ஆசிரியர் கார்த்திகேயன் சரித்திரங்களைத் தொட்டிருந்தார். சுவையாக இருந்தது. அவர் Troya படம் பார்த்து விட்டு அது பற்றி தனது பதிவில் எழுதியுள்ளார்.Troya படத்தை நானும் பார்த்தேன். எனக்கு நல்லாகப் பிடித்திருந்தது. எனது நாட்டிலும் போர் சூழ்ந்திருப்பதாலோ என்னவோ அப்படம் என்னை வெகுவாகப் பாதித்தது என்றே சொல்லலாம். அரச குடும்பம் என்கிறோம். அவர்களும் மனிதர்கள்தான். போர் என்ற ஒன்றால் அவர்கள் படும் துயர்.. பிரிவு.. எல்லாமே என்னைப் பாதித்தன. கதை வசனங்கள்.. அருமை. தமிழ்படங்களில் போல நீட்டி முழக்காது, நறுக்கென்று அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பெறுமதி. தமிழ்ப்படங்களும் இப்படி எடுக்கப் படவேண்டும்.

கார்த்திகேயன் இரு கேள்விகள் கேட்டு விட்டு பதில் தராது போய் விட்டார்.

கேள்விகள்-
* 1960-களில் சைனா நம் மீது படை எடுத்தது. ஆனால் அதுக்கு முன்னாடியே ஒரு இந்திய மன்னர் சைனா மீது படை எடுத்திருக்கிறார். யார் அவர்?

* 1500-களில் உலகின் மிகப்பெரிய நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை வகித்தது ஒரு இந்திய நகரம். அது எது?