Tuesday, August 24, 2004
26.8.2004 அன்று மரத்தடியில்
நிறைய எழுத வேண்டும் என நினைத்தாலும் எழுத நினைக்கும் போது நேரம் இருப்பதில்லை. நேரம் இருக்கும் போது எழுதுவதற்கான ஏதோ ஒன்று இருப்பதில்லை. இப்படியே பல காலங்கள் உருப்படியாக எதுவும் எழுதாமலே ஓடி விட்டன. அதற்காக இதுவரை எழுதியதெல்லாம் உருப்படியானவை என்று சொல்ல நான் வரவில்லை. ஏதோ எனது திருப்திக்காக எனக்குத் தோன்றுபவைகளை, நான் பார்ப்பவைகளை, எனக்குப் பிடித்தவைகளை, என்னைப் பாதித்தவைகளை... என்று எழுதுவேன். எனது எழுத்துக்கள் எனது துயரங்களின் வடிகால்களாயும், எனது சந்தோசத்தின் பகிர்தல்களாயும் இது வரை எனக்குத் துணை நின்றுள்ளன.
பலர் ஏன் இப்போ எழுதுவதில்லை என்று என்னைப் பல தடவைகள் கேட்டு விட்டார்கள். முற்றாக எழுதாமல் நான் இல்லை. வெளியில் எங்கும் பதிக்கா விட்டாலும் எனது டயறியில் ஏதோ எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.
இப்போது மதி மரத்தடி ஆண்டுவிழாக் கொண்டாட்டத்துக்காக ஏதாவது எழுதும் படி கேட்டா. எனது உபயநாள் ஆவணி 26 என்றும் சொல்லி விட்டா.
எழுதுவதற்கான உந்துதல் பெரியளவாக இல்லாதிருந்த போதும், மதியின் சாட்டிலாவது எழுதுவோம் என்ற எண்ணத்தில் ஏதோ முயற்சித்து எழுதியுள்ளேன். இடைவெளிகள் கூடியதாலோ என்னவோ எழுத்தோட்டம் சிறப்பாக அமையவில்லை. விரும்பினால் 26.8.2004 அன்று வாசித்துப் பாருங்கள்.
மரத்தடியில் எனது பதிவுகளாக 26.8.2004 அன்று வரப் போவபை...
சிறுகதை - நட்பு
சிறுகதை - தகைமை
கவிதை - விசும்பல்
நினைவுகள் - அம்மா சொல்லைத் தட்டினேன்.
சினிமாப்பாடல் - பூக்கொடியின் புன்னகை