Wednesday, April 20, 2005

ஆட்டோகிராப்


ஆட்டோகிராப் படத்தில் சேரனது வாழ்வில் குறுக்கிட்ட மூன்று பெண்கள் பற்றிச் சொன்னார். அதே போல ஒரு பெண் தன் வாழ்வில் குறுக்கிட்ட மூன்று ஆண்கள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கான உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

9 comments:

  1. படம் படுத்திருக்கும். நம்மெல்லாம் பதிவுலே கொஞ்சம் விவாதித்திருப்போம்.அப்புறம் மறந்து போயிருப்போம்.

    ReplyDelete
  2. திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும். வாயை பொத்திக்கிட்டு அந்த படத்திற்கு தெசிய விருது குடுத்துருவானுங்க.

    ReplyDelete
  3. Even though not in exactly same lines, Manathil uruthi vendum, avargal, movies or loosely based on the theme - several men entering in one woman's life.

    ReplyDelete
  4. அந்தப் படத்திலேயே.. பிற்காலத்தில் கமலா வீட்டுக்கு போய்.. அவளது மகனின் பெயர் என்ன என்ற கேட்க செந்தில் என்பான். அது ஹீரோவின் பெயர். இன்னொரு மகன் சுரேஸ் என்பான்.
    ஏற்கனவே சுரேஸ் எண்டொருவன் இருந்திருக்கிறான் என்று ஒரு வசனம் வரும். ஒருவேளை... அதுவே யதார்த்தமாயும் இருந்திருக்கலாம். பெண்களுக்கும் அது சாத்தியம் என்பதனால் அந்த செய்தியை இயக்குனர் சொல்லிப் போயிருக்கலாம். எந்த ஒரு கணவருக்கும் தெரியும்.. தன்னை மணம் புரிபவள் ஏற்கனவே வேறு யாரையாவது காதலித்திருக்கலாம்.. மனதால் நினைத்திருக்கலாம் தன்னைப் போலவே என்று.. இதெல்லாம் சாதாரணமப்பா..

    ReplyDelete
  5. அல்வாசிட்டி.விஜய் , Anonymous , சுரேஷ்,
    Must Do,

    கருத்துத் தந்த உங்கள்நால்வருக்கும் நன்றி.

    எனது மகனிடம் இதைக் கேட்ட போது அவன் ஒரே வரியில் "படம் ஓடியிருக்காது" என்றான்.

    சுரேஸ்,
    நீங்கள் குறிப்பிட்ட "அவர்கள்" படத்தை நான் பார்க்கவில்லை. "மனதில் உறுதி வேண்டும் " படத்தை பல வருடங்களுக்கு முன் பார்த்தேன். தற்போது நன்றாக மறந்து விட்டேன். அதனால் அதில் வந்த விடயங்களை என்னால் ஒப்பிட முடியவில்லை.

    must do,
    நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் படத்தில் கமலா தன் மகனுக்கு செந்திலின் பெயரை வைப்பதோடு நிறுத்தப் படுகிறது. அதுவே மாறி படம் முழுக்கக் கமலாவின் கதையானால் நிலைமை...?

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்..... திரௌபதியும் பாண்டவர்களும் கதை ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  7. எனக்கு பாய்ஸ் படம் பார்த்தப்பதான் திரௌபதியும் பாண்டவர்களும் கதை ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. Boys படம் வந்த போது எல்லோரும் குய்யோ முறையோ என்று கத்தினார்கள். அதற்காகவே அந்தப் படத்தைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.
    முன்னர் வந்த அழியாதகோலங்கள் படத்தின் சாயல் தெரிந்தது. அதே நேரம் எனக்கும் ஏனோ திரௌபதியும் பாண்டவர்களும் கதையும ஞாபகத்தில் வந்தது.

    ReplyDelete