Wednesday, October 12, 2005

சுணைக்கிது


நூல் அறிமுகம் - தேவா(ஜேர்மனி)

புகலிடபெண் எழுத்தாளரான நிரூபாவின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இச் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த பல சிறுகதைகள் புகலிட சஞ்சிகைகளான "பெண்கள் சந்திப்பு மலர் அம்மா, ஊதா சக்தி" போன்றவற்றில் வெளியானவையாகும். பெண் இலக்கிய உலகில் மிகுந்த ஈடுபாடுடைய நிருபாவின் கவிதைகளும் "மறையாத மறுபாதி" கவிதைத் தொகுதியில் வெளிவந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல் "தோற்றுத்தான் போவோமா"... (more)

2 comments:

  1. சந்திரவதனா தகவலுக்கு நன்றி.
    .....
    நிருபாவின் சிறுகதைகள் தொகுப்பாக வெளிவருவது சந்தோசமான விடயம். அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டமாதிரி, சிறுமிகளின் வாழ்க்கையை, சுரண்டல்களை அதிகம் கவனப்படுத்திய கதைகள் நிருபாவினது. மேலும் ஈழமண்ணின் மொழியின் இயல்புமாறாமல் கதை மாந்தர்கள் படைக்கப்பட்டிருந்ததும், கதைகளில் ஒன்றிப்போக வைத்திருந்தது.
    .....
    பலமோ, பலவீனமோ தொகுப்பாய் படைப்பாளிகள் நிச்சயம் வெளிவிடவேண்டும். பலர் நல்ல படைப்புக்கள் தந்தாலும், தொகுப்பாய் வெளிவிடாது இருப்பதால், இந்தப்படைப்புக்களை பற்றி விரிவான தளத்தில் பேசமுடியாதிருக்கின்றது. எனக்குத் தெரிந்த சிலரையும் விரைவில் தொகுப்பாய் வெளியிடுங்கள் என்றுதான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். உரியவர்கள் கவனதில் எடுத்து வெளியிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
  2. டி.சே.தமிழன்
    வரவுக்கு நன்றி.
    நிரூபாவின் படைப்புக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவரது எழுத்துநடை எனது கிராமத்துக்கதை போலவே இருக்கும். எனது அம்மம்மா, அப்பாச்சி... போன்றோரின் பேச்சுத்தமிழ் அவரது படைப்புக்களில் இயல்பாக வந்து விழுவது எனக்குள் வியப்பையும் சந்தோசத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளன. இவை மட்டுமல்லாமல் அவர் எடுத்துக் கொள்ளும் விடயங்களின் கனமும், யாருமே சொல்லத் துணியாத பல விடயங்களை அவர் மிக இயல்பாகச் சாதாரணமான வார்த்தைகளால் சொல்லி விடும் திறமையும் பாராட்டப் பட வேண்டியவை. அவரது படைப்புகள் தொகுப்பாகியதில் உங்களைப் போல எனக்கும் சந்தோசமே.

    பலமோ, பலவீனமோ தொகுப்பாய் படைப்பாளிகள் நிச்சயம் வெளிவிடவேண்டும்.

    இந்த உங்கள் கருத்து எனக்கும் சேர்த்தோ என யோசிக்கிறேன்.

    ReplyDelete