Saturday, November 05, 2005

கேள்வி நேரம் - 3


பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே...!
அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா?

12 comments:

  1. manam, vetkam , sood suranai to name a few..

    ReplyDelete
  2. "பசி வந்திடப் பற்றும் பறந்து போம்".

    ReplyDelete
  3. இப்ப பசியாயிருக்கிறன். எல்லாம் பறந்துபோச்செண்டதால எழுத ஏலாமக்கிடக்கு.
    பிறகு எழுதிறன்.

    ReplyDelete
  4. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
    கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
    பசி வந்திடப் பறந்து போம். - ஔவையார் இயற்றிய நல்வழி (26)

    ரொம்ப சீரியஸா பதில் சொல்லிருக்கேன், பொற்கிழி ஏதும் உண்டா! கிடைத்தால் மகிழ்வேன்!! நன்றி!!!

    ReplyDelete
  5. யாம், எமது முதற்பின்னூட்டத்தில் நல்வழிக்கு தொடுப்பு கொடுத்தோம்!

    ஆனால் வழிமாறி அத்தொடுப்பு விடுப்பு எடுத்துக் கொண்டபடியால், எடுப்பு எதுவும் இன்றி இங்கே http://www.chennainetwork.com/tamil/nalvazhi.html

    ReplyDelete
  6. கனகா, வசந்தன், ஞானபீடம்
    உங்கள் பதில்களுக்கு நன்றி.

    ஞானபீடம்
    உங்களுக்கு இல்லாததா? மின்னஞ்சலில் பரிசை அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  7. 'தேனின்
    கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்' வந்தால் மற்ற பத்தும் பறந்துவிடுமே அதற்கென்ன சொல்கிறீர்கள் ஞானபீடம்?

    ReplyDelete
  8. சந்திரவதனா,

    யூகத்தில் சிலவற்றை சொல்கிறேன். இவை சரியா என்று அறுதியிட்டுக் கூற இயலாது !!!


    அடக்கம்
    வெட்கம்
    தன்மானம்
    சிந்திக்கும் திறன்
    அச்சம்
    நட்பு
    அன்பு
    அமைதி
    கட்டுப்பாடு
    கண்ணியம்


    இதற்கு மேல் யோசித்தால் மண்டை சூடாகி விடும் ஆபத்து இருக்கிறது. அலுவலக மீட்டிங் ஒன்றுக்கு ஒடிக் கொண்டிருக்கிறேன் :)

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  9. I posted the above comment without seeing Agent 8860336 ஞானபீடம்'s comment that lists the 10 qualities :-(


    mannikkavum !

    ReplyDelete
  10. Anonymous, உங்கள் கேள்வி அவ்வையாருக்கு forward செய்துள்ளேன்!
    *** *** ***
    take it easy bala boss!

    - comment posted by: ஞானபீடம் (NJ)

    ReplyDelete
  11. "BOSS" வேண்டாம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன் ...

    'நற நற' வென்பது காதில் விழுகிறதா ??

    ReplyDelete
  12. 'நற நற' வென்பது காதில் விழுகிறதா ??

    பாலா
    அப்படியும் செய்வீர்களா?

    ReplyDelete