Saturday, January 15, 2005

பதிப்புகளோடு...


அச்சில் பதித்து விட்டு புத்தகங்களை விற்கவும் முடியாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லாமல் கட்டியழுபவர்கள் ஒரு புறமிருக்க சந்தா கட்டியிருந்தும், புத்தகங்கங்களும், பத்திரிகைகளும் இடைநடுவில் வராது நின்று விடுவது இன்னொருபுறம் நடக்கிறது. இது விடயத்தில் இராதாகிருஷ்ணன் கொஞ்சம் மனம் நொந்திருக்கிறார்.

இந்த நிலையில் எந்த சந்தாவும் கட்டாமல் முழுக்க முழுக்க இலவசமாய் என் வீடு தேடி வரும் பத்திரிகைகளையும் அதை அனுப்பி வைக்கும் உரிமையாளர்களையும் நான் நன்றியோடு அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

முதலாவதாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் வடலி பத்திரிகை. இப்பத்திரிகையில் நல்ல நல்ல பயனுள்ள கட்டுரைகள் இடம் பிடித்திருக்கும்.

அடுத்து, தற்போது சில மாதங்களாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் ஒருபேப்பர் பத்திரிகை. இப்பத்திரிகை வருகின்ற ஒவ்வொரு முறையும் எனது பிள்ளைகள் அதன் லேஅவுட்டையும் பெயரையும் வைத்து சிரிப்பலைகளோடு ஒரு விமர்சனம் செய்யாமல் விடுவதில்லை. உள்ளடக்கம் கூட சுவை சுவாரஸ்யம் கலந்து பயனுள்ள விடயங்களோடுதான்......