Monday, January 31, 2005
காணாமற் போய்விட்டது.
எனது பதிவொன்று பதிந்த உடனேயே காணாமற் போய்விட்டது.
ஏன்..?
தொடரும் இப்பிரச்சனைக்கான நிவர்த்தியை யாராவது கண்டு பிடித்தீர்களா?
இட்லி செய்யும் இன்னுமொருமுறை
நா.கண்ணன் இட்லி செய்யும் முறையைத் தந்துள்ளார்.
எனக்குத் தெரிந்த இன்னுமொருமுறை.
உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.
1கப் உழுந்துக்கு 2கப் ரவை என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.
அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.
பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.