Thursday, February 17, 2005

பனி கொட்டுகிறது

யேர்மனியில் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் இடமோ மலைப்பகுதி. வீட்டுக்குள்ளிருந்து பனியைப் பார்க்கும் போது கொள்ளை அழகு. பனிப்பூத்த மரங்கள்... பனி போர்த்திய வீடுகள்... அவைகளை ரசிப்பதில்தான் எத்தனை சுகம். வெளியில் இறங்கி பனிக்குள் கால் புதைத்து நடக்க வேண்டுமென்ற குழந்தைத்தனமான ஆசை.

நேற்று அந்த ஆசையைத் தீர்த்துக் கொண்டு போய் பேரூந்துக்காகத் காத்திருந்த போதுதான் அலுப்புத் தட்டியது. வாகனங்கள் எதுவுமே வழமை போல குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேரவில்லை. ஆங்காங்கு தடம் புரண்டு போனவையும், மதில்களிலும் மரங்களிலும் மோதியவையும், சில்லு சுற்றவே மறுத்ததால் நின்று போனவையும் என்று... வேலைக்கு யாருமே நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை.

இன்றும் அதே நிலைதான். காலை எழுந்ததிலிருந்து பனியை அள்ளிக் கொட்டுவதே முக்கிய பணியாய் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எவரது வீட்டின் முன்பாவது வழுக்கி வீழ்ந்து, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று வழக்குப் போட்டார்களோ..!
வீட்டின் முன்னுள்ள பனியை அள்ளாவதர் பாடு திண்டாட்டமாகி விடும். என் வீட்டின் முன் மீண்டும் குவிந்து விட்டது. அள்ளி விட்டு அல்லது தள்ளி விட்டு வருகிறேன்.