நித்திரை விழித்துப் பட்சணங்கள் பலசெய்து
வெற்றிலை பாக்குடன் மங்கலச் சுடரேற்றி
முற்றிய நற் பழங்கள் புது மலர்களுடன் முகம் சிரித்துப்
பத்தரை மாற்றுத் தங்கமென அலங்கரித்து
பக்தியுடன் பரவசமாய் வரவேற்கும் நாளன்றோ
முன்னொருகால் நாம் கண்ட சித்திரைப் புத்தாண்டு.