Wednesday, April 20, 2005

அழகி


அழகி படத்தை அருமையான படம் என்று எல்லோரும் புகழ்ந்தீர்கள்.
ஒரு படம் அருமையாவதற்கு கரு மட்டும் காரணமல்ல என்றாலும், அதன் கருவை அனேகமான ஆண்கள் எல்லோருமே வரவேற்றீர்கள்.

இப்போது எனது கேள்விகள்
1) தேவயானி தனது பள்ளிப் பருவத்து நட்பையும் காதலையும் மையப் படுத்தி, ஒருவனை வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருந்தால் பார்த்திபனின் நிலைப்பாடு எந்த வகையில் வெளிப்படும்? நீங்கள் அதை எந்த வகையில் வரவேற்பீர்கள்?

2) பார்த்திபனின் நிலையில் நந்திதா இருந்து, பார்த்திபனைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்திருந்தால் நந்திதாவின் கணவர் என்ன செய்திருப்பார்? அல்லது நீங்கள்தான் என்ன சொல்லியிருப்பீர்கள்?

ஆட்டோகிராப்


ஆட்டோகிராப் படத்தில் சேரனது வாழ்வில் குறுக்கிட்ட மூன்று பெண்கள் பற்றிச் சொன்னார். அதே போல ஒரு பெண் தன் வாழ்வில் குறுக்கிட்ட மூன்று ஆண்கள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கான உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?