Sunday, June 26, 2005

மரணத்தை உடம்பில் குண்டுகளாய்...


மரணத்தை உடம்பில் குண்டுகளாய் கட்டிக் கொண்டு..
சிரித்த படி கை காட்டி விட்டுப் போய் வெடித்துச் சிதறுபவர்களை நினைத்தாலே... மனசு பதறும். எப்படி..? எப்படி...? என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அலறும்.

திடீரென்று வந்த ஒரு வேகத்தில் தற்கொலை செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

தப்புவதற்கான சாத்தியங்கள் குறைவாயினும், தப்புவதற்கான சாத்தியம் இருக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையுடன் ஆயுதமேந்திப் போராடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

சாவேன் என்று தெரிந்து கொண்டு... அதற்கான ஆயத்தங்களை முற்கூட்டியே செய்து கொண்டு... உடம்பிலே குண்டைக் கட்டிக் கொண்டு... சிரித்துக் கொண்டு... கை காட்டிச் செல்லும்... அந்த மனசுக்குள் என்ன இருக்கும்...?

என்னுள் ஆயிரந்தடவைகள் அல்லது இலட்சந்தடவைகள் அல்லது அதையும் விட அதிகமான தடவைகள் எழுந்து விட்ட கேள்வி இது.


சாகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு, குண்டு வெடிப்பதற்கான ஆழியை அழுத்தும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான அந்தக் கணப்பொழுதில்... 21வயதுகள் மட்டுமே நிரம்பிய பலஸ்தீனப் பெண்ணான Wafa al-Biss

பரிதாபம். சாகவில்லை என்பதற்காகச் சந்தோசப்பட முடியாத பொழுதுகளும் உண்டென்றால் இதுதான். குண்டு வெடிக்கவில்லை. Wafa al-Biss இப்போ சிறையிலிருந்து அழுகிறாள்.

புகைப்படங்கள் - ஈ.பீ.ஏ