Thursday, June 30, 2005

ஒரு பேப்பர் 2வது அகவையில்


2வது அகவையில் காலடி வைத்திருக்கும்
ஒரு பேப்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

25வது ஒரு பேப்பர் வழமை போலவே ஏதோ ஒரு வகையில் எம்மை அவாப்பட வைக்கும் விதமாக வந்துள்ளது. இம்முறை பலாப்பழம். வாயூறுகிறது. எங்கிருந்து இந்தப் படங்களையெல்லாம் எடுக்கிறார்கள் என்று வியப்போடு எழும் கேள்விக்கான பதிலை தாமாகவே 11வது பக்கத்தில் தந்துள்ளார்கள். படங்களை ஒரு பேப்பருக்குக் கொடுத்துதவிய சுரேன், முத்து, சதா, ஒட்டாவா சுரேஷ்... ஆகியோரைக் கண்டிப்பாகக் பாராட்ட வேண்டும்.

இம்முறை இடம்பெற்ற ஆக்கங்கள் பற்றி அதிகம் எழுதத் தேவையில்லை. எல்லாவற்றையும் இணையத்திலேயே தந்துள்ளார்கள். படித்துப் பாருங்கள்.

வறுமை சரித்திரம் ஆகட்டும். கடன் பழுவிலிருந்து ஏழ்மை நாடுகளுக்கு மீட்சி அளிக்கும் இயக்கம் சம்பந்தமான சுவாரஸ்யமான செய்தி.

23வது பேப்பரில் றெபேக்கா I would never marry a tamil man. என்று எழுதி பலரதும் எதிர்ப்பையும் விசனத்தையும் சந்தித்துள்ளார். போனபேப்பரில் எல்லாளன் யோசித்தார். இம்முறை செந்தூரன் செய்தி கொடுத்துள்ளார்.

செல்வநாயகியின் (எது ஆன்மீகம்?) ஒட்டடை அடிப்பது அவசியம் - பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடல். அருமையான கருத்து. கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள்.

மர்மக்கதைகளில்தான் வாசித்திருப்பீர்கள். பாவம் எல்லாளன். அவருக்கு நியத்திலேயே நடந்திருக்கிறது. இந்த அவலம் உங்களுக்கும் வராதிருக்க இதை வாசித்துப் பாருங்கள்.

கனடாவிலிருந்து கிஸோக்கண்ணன் வலைப்பூ நட்சத்திரமாக இருந்த போது எழுதிய அந்தச் சுவையான பதிவு சில லூசுகள் சீதனம் வாங்கமாட்டினமாம்.

ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம் - ரசிகவ் ஞானியார்.

உளவியல் - முத்து

படம் காட்டுகிறார் நிர்மலா

கரிச்சானின் கோலங்கள்

ஏற்கெனவே இணையங்களில் சிதறிக் கிடந்தவைகளைத் தொகுத்தது மட்டுமென்றில்லாமல் பல புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளார்கள்.

மிக நல்ல சமூகக் கண்ணோட்டத்துடனான படைப்புக்களைத் தருகின்ற ஈழத்துப் பெண்ணெழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் ஒரு பேப்பருக்காகப் பிரத்தியேகமாகத் தருகின்ற பாதங்கள் பேசுகின்றன. சிறுவயதில் விளையாட்டுப் போல வாசித்த அல்லது சொல்லக் கேட்ட கதைகள் வாழ்வின் வளர்ச்சிக்கும் மனப்பக்குவத்துக்கும் உதவியது பற்றி அழகாகச் சொல்கிறார்.

வைத்தியர் பாலேந்திரன் அவர்களும் மரணதுன்பத்துக்கு கவுன்சிலிங் என்ற உளவியல் சார்ந்த கட்டுரை ஒன்றை ஒரு பேப்பருக்காக எழுதியுள்ளார்.

வன்னியிலிருந்த பொன்.காந்தன் தருகிறார் ஈழக்கிழவனின் பனையடி

கனடாவிலிருந்து பொன்னையா விவேகானந்தனின் கல்லின் கதை

2010 இல் இந்தியா எயிட்சில் - அல்வாசிட்டி விஜய்

திருமணம் - ந.ஹேமராஜ் லண்டன்

அறுவை

சினிமா -1, 2

இன்னும் பல எனது ரசனைக்கு அப்பாற்பட்ட விடயங்களும் உள்ளன.
ஒரு வேளை உங்கள் ரசனைக்குட்பட்டவையாக அவை இருக்கலாம்.