Wednesday, November 09, 2005

தமிழில் கணிதம்


பழைய கணக்கீட்டு முறைகள் பற்றி எனக்குத் தெரிந்த ஒன்றை கடந்தவாரம் எழுதிய போது திரு.பத்மனாபஐயர் அவர்கள் "தமிழில் கணிதம் தொடர்பான ஒரு தகவலைத் தருவதாகச்" சொன்னார். சொன்னபடி அனுப்பியும் உள்ளார்.

கேணல் ராயு

அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ் வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத் தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச் சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக் கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப் போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது. மிகுதி