Saturday, December 17, 2005
நேபாளத்தில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்
நேபாளத்தில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நேபாளத்தில் பெண்களின் உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
பூர்வீக சொத்தை விற்பதிலும், மற்றவருக்கு வழங்குவதிலும் பெண்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று நேற்று வியாழக்கிழமை நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
திருமணமாகியவுடன் பெண்கள் தமது பூர்வீக சொத்தை தந்தை வழி சொந்தங்களுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கூறும் சட்டத்தையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஒழிப்பதில் இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் தாக்கம் செலுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்
BBC 16.12.2005