Thursday, September 21, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 8

மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?

7 comments:

  1. இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?

    கூக்குரலாலே கிடைக்காது இது
    கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.

    வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்
    ஜனனம் என்பது வரவாகும் வரும்
    மரணம் என்பது செலவாகும்

    நமக்கும் மேலே ஒருவனடா அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா -தினம்
    நாடகம் ஆடும் கலைஞனடா

    ReplyDelete
  2. பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர்தான் ஊற்றுவார்கள்.
    இறந்ததும் அல்லது உயிர் போகும் தறுவாயில் துளசி தண்ணீர் விடுவர்
    'கருவால் வந்தது' கருவுடன் வரவில்லையே.
    பாடல் நன்றாக உள்ளது

    ReplyDelete
  3. ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
    கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?

    வீடு வரை உறவு வீதிவரை மனைவி
    காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
    -கவியரசர் கண்ணதாசன்

    அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே
    கைப்பற்றிய மாந்தரும் சுடுகாடுமட்டே
    மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடுமட்டே
    பற்றித்தொடரும் பாவமும் புண்ணியமும்!
    - பட்டினத்தார்

    ReplyDelete
  4. கவனக்குறைவு - வருந்துகிறேன்

    கைப்பற்றிய மாந்தரும் சுடுகாடுமட்டே என்பதை
    கைப்பற்றிய மாந்தரும் வீதிமட்டே என்று திருத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  5. வாழ்வே மாயம்= இந்த
    வாழ்வே மாயம்


    தாய் கொண்டு வந்ததை
    தாலாட்டி வைத்ததை
    நோய் கொண்டு போகும் நேரமம்மா

    ReplyDelete
  6. உலக வாழ்க்கை நடனம்
    நீ ஒப்புக்கொண்ட பயணம்
    முடியும் போது தொடங்கும் நீ
    தொடங்கும் போது முடியும்
    மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
    தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ

    ReplyDelete
  7. Thirumozhian, ENNAR, SP.VR.SUBBIAH, வைசா, மதுமிதா
    வருகைக்கு நன்றி.
    கூடவே அர்த்தமுள்ள பல வரிகளை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete