எதையேனும்
யாரையேனும்
எப்போதும்
காதலிப்பதில்தான்
உயிர்ப்பின் இரகசியம்
ஒளிந்திருக்கிறது
- எஸ்.டி.விஜய்மில்டன் -உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
நட்சத்திரம் பார்த்திருப்பேன்
கனவு போல மனதினிலே
கண் சிமிட்டி நீ சிரிப்பாய்
நீ சிரிக்கும் நொடியிலெந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்
- பாஸ்கர் சக்தி -காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........
(காதற்பாட்டு, அந்திப்பொழுது - பாரதியார் பாடல்கள்)