Saturday, March 11, 2006

படித்ததில் - பாதித்தது


பதிவுகளில் புதியமாதவியின் புதிய ஆரம்பங்கள் சிறுகதையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

இது ஒரு சிறுகதையானாலும் இன்னும் பஞ்சாப் மாநிலத்தின் மன்சாம் மால்வா பகுதிகளில் நடக்கும் உண்மைகளைக் கருவாகக் கொண்டே இது எழுதப் பட்டுள்ளது.

..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒன்னும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..' அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள்.

இந்த 21ம் நூற்றாண்டிலும் திரௌபதிகள் போன்று பெண்கள் வாழுகிறார்கள் என்ற போது மனதை என்னவோ செய்கிறது.