தலைப்பே அபத்தமாக இல்லையா!
இன்றைய ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி இது.
இந்தியாவின் இராஜஸ்தானில் பாடசாலைப் பாடப் புத்தகங்களில்
"ஒரு கழுதை, ஒரு குடும்பப் பெண்ணைப் போன்றது. சரியாகச் சொல்வதானால் கழுதை, குடும்பப் பெண்ணை விட ஒரு படி உயர்ந்தது" என்று குறிப்பிடப் பட்டுள்ளதாம்.
ஏன் கழுதை ஒருபடி உயர்ந்ததெனில், ஒரு பெண் சில சமயங்களில் கணவன் மேல் குற்றம் கண்டு தனது பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாளாம். ஆனால் கழுதை ஒரு போதும் அப்படிப் போக மாட்டாதாம். எப்போதும் எஜமானனுக்கு விசுவாசமாக இருக்குமாம்.
இந்தப் பாடப்புத்தகத்தை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்.