Wednesday, May 17, 2006

கல்லறைகள் விடை திறக்கும்... TTN இல்


இன்று ரீரீஎன் தொலைக்காட்சியில் பாட்டுக்கலசம் என்றொரு நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது தாயகத்திலிருந்து ஒளிபரப்பான ஒரு போட்டி நிகழ்ச்சியாகவே இருந்தது. தாயகப்பாடல்களை மையமாக வைத்தே கேள்விகள் கேட்கப் பட்டன. போட்டியில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களும், கிளிநொச்சி ராமநாதபுரம் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதற் சுற்றுக்கான கேள்விகளுக்காக கல்லறைகள் விடை திறக்கும்... என்ற பாடல் பாடப் பட்டது. சாந்தன் அவர்களே நேரே வந்து அந்தப் பாடலை மிகவும் உருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் பாடிய போது மனம் அப்படியே பாடலுடன் ஒன்றிக் கலங்கி விட்டது.

கல்லறைகள் விடை திறக்கும் - அங்கு
மெல்லிய காற்றது இருக்கும்
பாலினைச் சொரிந்திடும் நிலவு - ஒரு
பாடலை எழுதிடும் இரவு... பாடலைக் கேட்க இங்கே

தொடர்ந்து இரண்டாவது சுற்றுக்கு சரணத்தைக் கொடுத்து பாடலைக் கேட்டார்கள். பங்குபற்றிய மாணவர்கள் மிக அழகாக முதல் அடியை எடுத்துப் பாடினார்கள். தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டினார்கள்.

மூன்றாவது சுற்றுக்கு ஆரம்ப இசை கொடுக்கப் பட்டு பாடலைக் கண்டு பிடிக்கும் படி கேட்கப் பட்டது. அதிலும் மாணவர்கள் அருமையாகப் பாடினார்கள்.

இந்நிகழ்விலே ஜெ.துஸ்யந்தினி என்ற மாணவி பாடிய போது மிகமிக அருமையாக இருந்தது. அந்த மாணவியைத் தொடர்ந்து பாடவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றியது.