எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்க்கை நகருகிறது. எவ்வளவுதான் பிழைத்துப் போனாலும் சரிவந்து விடும் என்ற நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பே ஒவ்வொருவரையும் வாழ வைக்கிறது. அந்த நம்பிக்கையும் பிழைத்துப் போகும் கட்டத்தில்தான் மனம் வேறொன்றை நாடத் தொடங்குகிறது. அங்கும் மீண்டும் எதிர்பார்ப்பு.
ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்பு இல்லையென்றால் அடுத்து வரப்போகும் பொழுதின் மீதான சுவாரஸ்யமே அற்றுப் போய் விடும். அந்த வகையில் எதிர்பார்ப்பு என்ற ஒன்று வாழ்வில் அவசியம் என்பதை உணர முடிகிறது.