Wednesday, September 06, 2006

கவிதைகள்


கவிதைகள் எந்த வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன என்று எனக்குப் புரியவில்லை. எதுகை, மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்கள் கவிதைகளை அழகு படுத்தினாலும், எனக்கு அதெல்லாமுமாய் எழுதவும் தெரியவில்லை. யாராவது அதையெல்லாம் சேர்த்து எழுதினால், என்னால் அவைகளை நன்கு ரசிக்க முடிகிறது. எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூடச் சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.

இவை எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத, எந்த வரைவிலக்கணங்களுக்குள்ளும் உட்படாத எனது உணர்வுகளின் வடிகால்கள்.