Saturday, October 14, 2006

வாழ்க்கைப் பாடங்கள்


இன்று காலையில் பிரெஞ்சு இனத்தவர் ஒருவரால் எழுதப்பட்ட மூதுரை ஒன்றை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் தமிழாக்கம்
வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னரே
எமது பாதி வாழ்க்கை போய் விடுகிறது.


இது என் மனதில் இன்னொரு விடயத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தது
குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ள முன்னரே
எமது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள்.


உண்மையைச் சொல்லப் போனால் எனது குழந்தைகளை நான் வளர்க்கத் தொடங்கிய போது குழந்தை வளர்ப்புப் பற்றிய பெரிதான அறிவு என்னிடம் இருக்கவில்லை. இப்போது, குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும்... என்று பல விடயங்கள் தெரிகின்றன. ஆனால் எனது குழந்தைகள் வளர்ந்து பேரப்பிள்ளைகளும் பிறந்து விட்டார்கள்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும் போது அதன் தேவைகளும் எம்மைக் கடந்து விடுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.