Sunday, November 26, 2006
மாங்குளத்தில் மாவீரர் விழாக்கவி - (1990)
அரங்குகள் பல கண்ட
ஆசான் முருகேசனுக்கும்
அடுத்தடுத்துக் கவி படித்த
நல்ல தமிழ் கவிஞர்கட்கும்
அமர்ந்திருந்தும் ஆர்ப்பரித்தும்
கவி கேட்கும் மக்களுக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கம்!
வாருங்கள்!
மண்ணுக்காய் மரணித்த மாவீரர் தினம் சிறக்க
மடை திறந்த வெள்ளமென வாருங்கள்!
வந்து பாருங்கள்!
சனத்தோடு சனமாகக் கைகளைத் தட்டுங்கள்
முன்னிரண்டு விரலெடுத்து மூச்சிழுத்து
பன்னிரண்டு மைல் கேட்க விசிலடியுங்கள்
போதும்! அது போதும்!
பின் இரண்டு மணியளவில் வீடடைந்து
விழா மறந்து
மாவீரர் செயல் மறந்து
மாற்றான் ஷெல் மடியிலே வீழும் வரை
உறங்குங்கள்!
விடிந்தெழுந்து வேறேதும் சேதியுண்டா..?
என்று கேளுங்கள்..! வேறென்ன..!
ஈழ மண் மீட்டெடுக்க எவனோ ஈன்ற
இளைஞர்கள் இல்லையா எங்களிடம்!
நாமென்ன முட்டாள்களா!
நம் மகனை அனுப்புதற்கு!
என மெல்ல ஒதுங்குங்கள். - மிகுதி