வெற்றி கேட்டுக் கொண்டதின் பேரில்
இந்த விளையாட்டுப் பாடல்கள் யாருக்காவது தெரியுமா?
1 காற்றடிக்குது மழை அடிக்குது..
2 நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி..
3 அருப்புத் தட்டி இருப்புத் தட்டி...
முழுப் பாடலும் தேவைப் படுகிறது
Friday, April 27, 2007
மகரந்தங்களினால் ஒவ்வாமையா...?
இந்த மாதங்களில் மகரந்தங்களினால் பலரும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.
தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. ஜேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.003மில்லிமீற்றர் அளவுள்ள பூந்தாதுக்களினால் பாதிக்கப் பட்டவர்கள்.
ஜேர்மனியில் அனேகமாக மாசி கடைசியிலிருந்து புரட்டாதி கடைசி வரை பூந்தாதுக்கள் பறக்கின்றன. இந்தப் பூந்தாதுக்கள் காற்றினால் ஏறக்குறைய 300கிலோமீற்றர் தூரம் வரை எடுத்துச் செல்லப் படுகின்றன.
இவை அழையா விருந்தாளியாக மூக்கினுள் நுழையும் போது, பாதுகாப்புச் ஷெல்கள் இவைகளுக்கு எதிராக antibody யைத் தயாரிக்கின்றன. இதன் பாதிப்பு ஒரு பாரதூரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும். இதனால் வாயும் மூக்கும் புண்ணாகிச் சளி உண்டாகும்.
Pollenallergie எனக் குறிப்பிடப்படும் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாகத் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டால் மார்புச்சளியினாலும் அதனால் ஏற்படும் அஸ்மா இழுப்பு நோயினாலும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்த ஒவ்வாமை மூக்கிலிருந்து சுவாசக் குழாயின் உட்புறச் சவ்விற்கு நகரத் தொடங்கி விடும்.
இதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பூந்தாதுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
தை மாதத்தில் இருந்தே உங்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டால்
உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Graeserpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.
சித்திரையிலிருந்து ஆவணி வரையுள்ள காலப் பகுதியில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Wildkraeuterpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.
கால நிலைக்கும் வெப்ப தட்ப நிலைக்கும் ஏற்ப இந்த மாத எல்லைகள் ஒன்றிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னுக்குப் பின் மாறுபடலாம்.
மாசியும் பங்குனியும் Erle, Hasel என்பன பூக்கும் காலங்கள். இதே காலத்தில்தான் Weide, Pappel, Ulme, Esche என்பனவும் பூக்கத் தொடங்குகின்றன.
தெற்கு ஜேர்மனியில் பங்குனி கடைசியில் Birken பூக்கும். Birken, Karle, Hasel இம் மூன்றினதும் பூந்தாதுக்கள் மிகவும் கடுமையான ஒவ்வாமையைத் தரக் கூடியவை.
உங்களுக்கு எந்தெந்த மாதங்களில் ஒவ்வாமைச் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை அவதானித்து, மேற்குறிப்பிட்டவைகளையும் கவனத்தில் கொண்டு எந்தப் பூவின் மகரந்தம் உங்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். அல்லது மருத்துவரிடம் ஒவ்வாமைக்கான பிரத்தியேகப் பரிசோதனையைச் செய்தும் அறிந்து கொள்ளலாம்.
இப்படியான பூந்தாதுக்களினால் ஏற்படும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் - தும்மல், மூக்கினுள் அரிப்பு, எரிச்சல், - சளி - தொண்டையில் அரிப்பு, எரிச்சல் - கண்ணில் கடி, எரிச்சல், - போன்றவை.
வீட்டினுள்ளே உள்ள காற்று ஈரலிப்புத்தன்மை உள்ளதாக இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி படுக்கையறையினுள் வைக்கலாம்)
வெயில் நேரத்தில் புற்கள், செடிகள் நிறைந்த பகுதிகளிலோ, வயல் வெளிகளிலோ உலாப் போவதையும், சைக்கிள் ஓடுவதையும் தவிர்த்து மழை பெய்து ஓய்ந்த பின் உலாப் போங்கள்.(மழை நேரத்தில் மிகக் குறைந்த மகரந்தத்துகள்களே காற்றோடு உலாப்போகும்.)
மோட்டார் வாகனங்களில் செல்லும் போது கண்ணாடிகளை மூடி விடுங்கள். ஒரு காற்று வடிகட்டியை வாகனத்துள் பொருத்தி வையுங்கள்.
இரவில் தெளிவான சுத்தமான நீரில் தலையைக் கழுவுங்கள்.
வெளியில் போகும் போது அணிந்த உடைகளை படுக்கையறையில் நின்று களையவோ, படுக்கையறையில் கொழுவவோ வேண்டாம். (ஏனெனில் உடைகளில் இருக்கும் மகரந்தத் துகள்கள் படுக்கையறையில் வீழ்ந்திருந்து இரவு முழுவதும் உங்களைப் படுக்க விடாது தொந்தரவு செய்யும்.)
வீட்டில் உள்ள தூசிகளை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.
படுக்கையறையில் நிலவிரிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மெத்தைகளும், தலையணைகளும் மிருகங்களின் உரோமங்களினாலோ, பறவைகளின் இறகுகளினாலோ செய்யப் படாதவைகளாக பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.
இந்த ஒவ்வாமைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம்
சில மருந்துகள் இவ் ஒவ்வாமையினால் வேறு விதமான பாரிய பக்க விளைவுகளைக் கொடுக்கும் அபாயம் இருப்பதால், உங்கள் உங்கள் நாடுகளில் உங்களது மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் விநியோகிக்கப் படும் ஒவ்வாமைக்குரிய பிரத்தியேக அட்டையைப் பெற்று, அதை நிரப்பி எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.
பிற்குறிப்பு - தகவல்கள் ஆரோக்கியம் மருத்துவம் சம்பந்தமான ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றிலிருந்து எடுக்கப் பட்டதால் மரங்களினதும், பூக்களினதும் பெயர்களை ஜேர்மன் மொழியிலேயே தந்துள்ளேன்.
சந்திரவதனா
வைகாசி - 1997
ஜேர்மனியில் அனேகமாக மாசி கடைசியிலிருந்து புரட்டாதி கடைசி வரை பூந்தாதுக்கள் பறக்கின்றன. இந்தப் பூந்தாதுக்கள் காற்றினால் ஏறக்குறைய 300கிலோமீற்றர் தூரம் வரை எடுத்துச் செல்லப் படுகின்றன.
இவை அழையா விருந்தாளியாக மூக்கினுள் நுழையும் போது, பாதுகாப்புச் ஷெல்கள் இவைகளுக்கு எதிராக antibody யைத் தயாரிக்கின்றன. இதன் பாதிப்பு ஒரு பாரதூரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும். இதனால் வாயும் மூக்கும் புண்ணாகிச் சளி உண்டாகும்.
Pollenallergie எனக் குறிப்பிடப்படும் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாகத் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டால் மார்புச்சளியினாலும் அதனால் ஏற்படும் அஸ்மா இழுப்பு நோயினாலும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்த ஒவ்வாமை மூக்கிலிருந்து சுவாசக் குழாயின் உட்புறச் சவ்விற்கு நகரத் தொடங்கி விடும்.
இதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பூந்தாதுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
தை மாதத்தில் இருந்தே உங்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டால்
உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Graeserpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.
சித்திரையிலிருந்து ஆவணி வரையுள்ள காலப் பகுதியில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Wildkraeuterpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.
கால நிலைக்கும் வெப்ப தட்ப நிலைக்கும் ஏற்ப இந்த மாத எல்லைகள் ஒன்றிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னுக்குப் பின் மாறுபடலாம்.
மாசியும் பங்குனியும் Erle, Hasel என்பன பூக்கும் காலங்கள். இதே காலத்தில்தான் Weide, Pappel, Ulme, Esche என்பனவும் பூக்கத் தொடங்குகின்றன.
தெற்கு ஜேர்மனியில் பங்குனி கடைசியில் Birken பூக்கும். Birken, Karle, Hasel இம் மூன்றினதும் பூந்தாதுக்கள் மிகவும் கடுமையான ஒவ்வாமையைத் தரக் கூடியவை.
உங்களுக்கு எந்தெந்த மாதங்களில் ஒவ்வாமைச் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை அவதானித்து, மேற்குறிப்பிட்டவைகளையும் கவனத்தில் கொண்டு எந்தப் பூவின் மகரந்தம் உங்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். அல்லது மருத்துவரிடம் ஒவ்வாமைக்கான பிரத்தியேகப் பரிசோதனையைச் செய்தும் அறிந்து கொள்ளலாம்.
இப்படியான பூந்தாதுக்களினால் ஏற்படும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் - தும்மல், மூக்கினுள் அரிப்பு, எரிச்சல், - சளி - தொண்டையில் அரிப்பு, எரிச்சல் - கண்ணில் கடி, எரிச்சல், - போன்றவை.
இவ்விதமான ஒவ்வாமையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்.
பகல் பொழுதுகளில் வீட்டுக்குள் வரும் காற்றைக் குறைத்து இரவில் மட்டும் ஜன்னலைத் திறந்து வீட்டுக்குள்ளே காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.வீட்டினுள்ளே உள்ள காற்று ஈரலிப்புத்தன்மை உள்ளதாக இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி படுக்கையறையினுள் வைக்கலாம்)
வெயில் நேரத்தில் புற்கள், செடிகள் நிறைந்த பகுதிகளிலோ, வயல் வெளிகளிலோ உலாப் போவதையும், சைக்கிள் ஓடுவதையும் தவிர்த்து மழை பெய்து ஓய்ந்த பின் உலாப் போங்கள்.(மழை நேரத்தில் மிகக் குறைந்த மகரந்தத்துகள்களே காற்றோடு உலாப்போகும்.)
மோட்டார் வாகனங்களில் செல்லும் போது கண்ணாடிகளை மூடி விடுங்கள். ஒரு காற்று வடிகட்டியை வாகனத்துள் பொருத்தி வையுங்கள்.
இரவில் தெளிவான சுத்தமான நீரில் தலையைக் கழுவுங்கள்.
வெளியில் போகும் போது அணிந்த உடைகளை படுக்கையறையில் நின்று களையவோ, படுக்கையறையில் கொழுவவோ வேண்டாம். (ஏனெனில் உடைகளில் இருக்கும் மகரந்தத் துகள்கள் படுக்கையறையில் வீழ்ந்திருந்து இரவு முழுவதும் உங்களைப் படுக்க விடாது தொந்தரவு செய்யும்.)
வீட்டில் உள்ள தூசிகளை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.
படுக்கையறையில் நிலவிரிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மெத்தைகளும், தலையணைகளும் மிருகங்களின் உரோமங்களினாலோ, பறவைகளின் இறகுகளினாலோ செய்யப் படாதவைகளாக பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.
இந்த ஒவ்வாமைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம்
சில மருந்துகள் இவ் ஒவ்வாமையினால் வேறு விதமான பாரிய பக்க விளைவுகளைக் கொடுக்கும் அபாயம் இருப்பதால், உங்கள் உங்கள் நாடுகளில் உங்களது மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் விநியோகிக்கப் படும் ஒவ்வாமைக்குரிய பிரத்தியேக அட்டையைப் பெற்று, அதை நிரப்பி எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.
பிற்குறிப்பு - தகவல்கள் ஆரோக்கியம் மருத்துவம் சம்பந்தமான ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றிலிருந்து எடுக்கப் பட்டதால் மரங்களினதும், பூக்களினதும் பெயர்களை ஜேர்மன் மொழியிலேயே தந்துள்ளேன்.
சந்திரவதனா
வைகாசி - 1997
Monday, April 02, 2007
WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்
பயம்
நீங்கள் 14வது மாடிக்கு நடந்தே, அதாவது படிகளில் ஏறியே போயிருக்கிறீர்களா? ம்... ´லிப்ற்´ இல்லாவிடில் என்ன செய்வது, நடக்கத்தானே வேண்டும். ஆனால் ´லிப்ற்´ இருக்கத் தக்கதாகவே நடந்திருக்கிறீர்களா? நான் நடக்கிறேன். ´லிப்ற்´ பக்கத்தில் இருக்க நான் மாடிப்படிகளில் ஏறியே போகிறேன். காரணம் பயம். பூட்டப்பட்ட அந்த சிறிய இடம் கொண்ட ´லிப்ற்´ க்குள் சில விநாடிகள் கூட நிற்கப் பயம்.
முன்னர் அப்படியில்லை. சிறுவயதில், கொழும்பில் முதன்முதலாக அப்பாவுடன் ´லிப்ற்´ றில் போன போது என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எப்படி இது சாத்தியம் என்ற வியப்பு. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஓடிச் சென்று " அம்மா, இன்று றூம் நடந்நது" என்றேன். அதன் பின்னான பொழுதுகளிலும் ´லிப்ற்´ என்னைப் பயமுறுத்தியதில்லை. ஆனால் இப்போது... எப்போது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. மெதுமெதுவாக ஆரம்பித்த பயம், இப்போது பூதாகரமாக என்னை ஆட் கொண்டுள்ளது.
சில வாரங்களின் முன் 14வது மாடிக்கு நடந்தேன். அது ஒரு நாள்தான் என்பதால் பரவாயில்லை. சில மாதங்களின் முன் காலில் ஒரு வலி காரணமாக மருத்துவமனையில் பிரத்தியேக சிகிச்சை பெற வேண்டியிருந்தது. மருத்துவமனைக்குரிய பேரூந்து நிலையத்தில் இருந்து 9வது மாடிக்குப் போனாலே, எனது சிகிச்சைக்குரிய இடத்தை அடையலாம். கிழமையில் இரு நாட்கள் படி 4 வாரங்கள் செல்ல வேண்டியிருந்தது. 5வது மாடிவரை ஓடி ஓடி ஏறுவேன். 6வது மாடியில் மெதுவாக மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தடுமாறும். ஆனாலும் ஏறுவேன். 9வது மாடிக்குப் போய்ச் சேரும் போது களைத்திருப்பேன். ´லிப்ற்´ றின் உள்ளே போவோரும், வெளியே வருவோரும் என்னை விநோதமாகப் பார்த்துக் கொண்டே போவார்கள். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.
தினமும் மூன்று நான்கு மாடிகளை ஏறியே கடக்கிறேன். வேலையிடத்தில் எனது நண்பிகள் எல்லோரும் என்னைப் பார்த்துப் பகிடி பண்ணுவார்கள். எனது கணவரோடு கூட எங்கே சென்றாலும் அவர் ´லிப்ற்றில்´ நுழைய நான் படிகளில் விரைவேன். ஆனால் 5வது மாடிவரை ´லிப்ற்´ றையும் விட வேகமாக ஓடி ஏறி விடுவேன். அதன் பின்தான் என்னில் சோர்வு ஏற்படத் தொடங்கும்.
WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை எனது இந்தத் தன்மை கூட WEIRD ஆக இருக்குமோ?
ஏகாந்தம்
பலரோடோ அன்றில் சிலரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது, சில நிமிடங்கள்தான் முழுமையாக நான் அங்கு இருப்பேன். பின்னர் நான் மட்டும் அங்கு இருக்க, எனது நினைவுகளும், சிந்தனைகளும் வேறெங்காவது பறந்து விடும். நடந்தவை, நடக்கப் போவதான கற்பனை... ஏதோ ஒன்றுடன் நான் லயித்து விடுவேன். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதே என் காதிலோ, சிந்தனையிலோ விழாது. இதனால், என்னைச் சுற்றி உள்ளவர்களின் "என்ன உலகம் சுற்றப் போய் விட்டாயா? கனவு காண்கிறாயா? எந்த உலகத்தில் நிற்கிறாய்? ....? " என்பது போன்றதான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது அசடு வழிவது உண்டு.
இது தொலைக்காட்சி பார்க்கும் போதும் வானொலி கேட்கும் போதும் கூட நடக்கும். கண்கள் தொலைக்காட்சியில் இருக்கும். கவனம் வேறெங்கோ நிலைத்திருக்கும்.
மறதி
செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைக் கூட மறந்து விடுவது. மறக்கக் கூடாது என்று நினைவாகத் துண்டுப் பேப்பரில் எழுதி, கண்ணுக்குத் தெரியக் கூடிய இடத்தில் குத்தி வைத்து விட்டு துண்டை கவனத்தில் எடுத்துப் பார்க்கவே மறந்து விடுவது.
இஸ்திரிப்பெட்டியின் பிளக்கைக் களற்றினேனா, மின்சார அடுப்பை அணைத்தேனா, வீட்டுக்கதவைப் பூட்டினேனா, கார்லைற்றை நிற்பாட்டினேனா... என்றெல்லாம் அநாவசியமாகக் குழம்புவது. ஆனால் அவையெல்லாம் எந்த சிந்தனைக்கும் இடமின்றி தன்பாட்டிலே நடந்திருக்கும்.
ஞாபகசக்தி
இத்தனை மறதிகள் மத்தியில் பழசுகள் எதுவுமே மறக்காமல் இருப்பது. சின்னவயது சம்பவங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டுமாய் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அதையும் விட எண்கள். எனது நண்பர்கள், உறவினர்கள் சக வேலையாட்கள்.. என்று எல்லோரது தெலைபேசி எண்களுமே, அது எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை, எல்லாமே எனக்கு மனப்பாடம். (இத்தனைக்கும் நான் யாருக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுவது இல்லை) பிறந்தநாட்களும் அப்படியே. தெரிந்தவர்களின் கார் இலக்கங்கள் கூட மறப்பதில்லை.
யாராவது முன்னர் எப்போதாவது எனக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாலும், எனது தொலைபேசியில் அந்த இலக்கம் விழும் பட்சத்தில் அவர் சில வருடங்கள் கழித்து அழைப்பை மேற்கொள்ளும் போது அந்த இலக்கத்தை வைத்தே இன்னார்தான் என்று கண்டு பிடித்து விடுவேன்.
பிடிக்காதது
துப்பரவாகப் பிடிக்காத விடயம் தொலைபேசுவதும், தொலைபேசியில் அலட்டுவதும். தொலைபேசி சிணுங்கினால் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே தொலைபேசியை எடுப்பேன். கதைக்கும் போது அலட்டினால் முன்னர் என்றால் பேனாவால் பக்கத்தில் உள்ள பேப்பர் எல்லாம் கிறுக்கித் தள்ளி விடுவேன். இப்போதென்றால் அவர்களுக்கு ம்... கொட்டிக் கொண்டு, கணினியின் முன் போயிருந்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இனியில்லை என்ற அவசிய தேவைகள் இன்றி அம்மா, எனது குழந்தைகள், மிஞ்சினால் எனது சகோதரர்கள் தவிர்ந்த வேறு யாருக்கும் தொலைபேசி எடுக்க மாட்டேன். இதனால் பலரது, அதாவது மிக நெருக்கமான உறவுகளின் அதிருப்திக்குக் கூட ஆளாகியிருக்கிறேன்.
தொந்தரவு
எந்த நேரமும் பாட்டுக் கேட்க வேண்டும். எந்த சீரியஸான வேலையில் இருந்தாலும் பரவாயில்லை. பாட்டு வேண்டும். ரேடியோ ஒலிக்கா விட்டால் என்னில் ஏதோ ஒன்று குறைந்து விட்டது போல உணர்வேன். சோர்வாகி விடுவேன். சின்னவயதில் படிக்கும் போது கூடப் பாட்டுப் போட்டு விட்டுத்தான் படிப்பேன். இப்போதும் படுக்கும் போதும் பாட்டு வேண்டும். இது ஆரம்பத்தில் எனது கணவரைத் தொந்தரவு செய்வதாகவே இருந்திருக்கிறது. "இதென்ன தேத்தண்ணிக் கடையே? இராப்பகலா..." என்ற அவரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். இப்போது என்னோடு சேர்ந்து அவரும் பழகி விட்டார்.
தவிர்க்க முடியாத இன்னும் சில
#கவலையோ, சந்தோசமோ எதுவாயினும் டயறி போல எழுதித் தள்ளி விடுவது.
#எங்கு போனாலும் புத்தகங்கள் வாங்குவது.
#ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி விடுவது.
#எதைக் கொடுத்தாலும் புத்தகங்களை இரவல் கொடுக்க மனம் சம்மதிக்காதது.
#உடுப்பு அலுமாரியில் ஒரு உடுப்பின் மடிப்பு சற்றுக் கலைந்திருந்தாலும், மீண்டும் மீண்டுமாய் அதை எடுத்து மடித்து வைப்பது.
#தொலைக்காட்சியின் முன் 15 நிமிடங்களுக்கு மேல் விழித்திருக்க முடியாமல் நித்திரையாகி விடுவது.
#யாருடையதாவது வீட்டுக்கு விருந்தினராகச் சென்று விட்டு, அவர்களின் வரவேற்பறையில் மணிக்கணக்கில் இருந்து கதைப்பதை எந்த வகையிலும் ரசிக்க முடியாமல் நித்திரை தூங்கி விடுவது.
கவலையானது
தனிமையிலோ அன்றிப் பலர் நடுவிலோ எப்போதும் மனதுக்குள் ஏதாவது நல்ல கதைகள், கவிதைகள் என்று புனைந்த படியே இருந்து விட்டு, வீட்டுக்கு வந்த பின் அதை எழுத நினைக்கும் போது எழுத முடியாமல் அந்தப் புனைவுகள் கலைந்து போய் விடுவது.
அந்தந்த நேர உணர்வுகளின் எழுச்சியில், மனதின் ஆழத்திலிருந்து எழும் விடயங்களை அழகாக எழுதத் தொடங்கி, சில பக்கங்களை நிரப்பி விட்டு, அவைகளை முடிக்க முடியாமலே விட்டு விடுவது.
ரசனை
தெளிந்த நீரோடை, நீலவானம், பனிப்போர்வை, வண்ணப்பூக்கள்.. அழகிய குழந்தைகள்... எதைக் கண்டாலும் அவைகளின் அழகில் மனம் சொக்கி அப்படியே லயித்து நடுரோட்டில் கூட நின்று விடுவது.
செல்லி என்னை அழைத்ததால் WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் விளங்காமலே இதை எழுதினேன். மிக அதிகமாகவே எழுதி விட்டேன் போலிருக்கிறது. செல்லி ஏன் அழைத்தேன் என்று தலையிலே கை வைக்காது விட்டால் சரி.
சந்திரவதனா
ஜேர்மனி
2.4.2007
நீங்கள் 14வது மாடிக்கு நடந்தே, அதாவது படிகளில் ஏறியே போயிருக்கிறீர்களா? ம்... ´லிப்ற்´ இல்லாவிடில் என்ன செய்வது, நடக்கத்தானே வேண்டும். ஆனால் ´லிப்ற்´ இருக்கத் தக்கதாகவே நடந்திருக்கிறீர்களா? நான் நடக்கிறேன். ´லிப்ற்´ பக்கத்தில் இருக்க நான் மாடிப்படிகளில் ஏறியே போகிறேன். காரணம் பயம். பூட்டப்பட்ட அந்த சிறிய இடம் கொண்ட ´லிப்ற்´ க்குள் சில விநாடிகள் கூட நிற்கப் பயம்.
முன்னர் அப்படியில்லை. சிறுவயதில், கொழும்பில் முதன்முதலாக அப்பாவுடன் ´லிப்ற்´ றில் போன போது என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எப்படி இது சாத்தியம் என்ற வியப்பு. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஓடிச் சென்று " அம்மா, இன்று றூம் நடந்நது" என்றேன். அதன் பின்னான பொழுதுகளிலும் ´லிப்ற்´ என்னைப் பயமுறுத்தியதில்லை. ஆனால் இப்போது... எப்போது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. மெதுமெதுவாக ஆரம்பித்த பயம், இப்போது பூதாகரமாக என்னை ஆட் கொண்டுள்ளது.
சில வாரங்களின் முன் 14வது மாடிக்கு நடந்தேன். அது ஒரு நாள்தான் என்பதால் பரவாயில்லை. சில மாதங்களின் முன் காலில் ஒரு வலி காரணமாக மருத்துவமனையில் பிரத்தியேக சிகிச்சை பெற வேண்டியிருந்தது. மருத்துவமனைக்குரிய பேரூந்து நிலையத்தில் இருந்து 9வது மாடிக்குப் போனாலே, எனது சிகிச்சைக்குரிய இடத்தை அடையலாம். கிழமையில் இரு நாட்கள் படி 4 வாரங்கள் செல்ல வேண்டியிருந்தது. 5வது மாடிவரை ஓடி ஓடி ஏறுவேன். 6வது மாடியில் மெதுவாக மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தடுமாறும். ஆனாலும் ஏறுவேன். 9வது மாடிக்குப் போய்ச் சேரும் போது களைத்திருப்பேன். ´லிப்ற்´ றின் உள்ளே போவோரும், வெளியே வருவோரும் என்னை விநோதமாகப் பார்த்துக் கொண்டே போவார்கள். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.
தினமும் மூன்று நான்கு மாடிகளை ஏறியே கடக்கிறேன். வேலையிடத்தில் எனது நண்பிகள் எல்லோரும் என்னைப் பார்த்துப் பகிடி பண்ணுவார்கள். எனது கணவரோடு கூட எங்கே சென்றாலும் அவர் ´லிப்ற்றில்´ நுழைய நான் படிகளில் விரைவேன். ஆனால் 5வது மாடிவரை ´லிப்ற்´ றையும் விட வேகமாக ஓடி ஏறி விடுவேன். அதன் பின்தான் என்னில் சோர்வு ஏற்படத் தொடங்கும்.
WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை எனது இந்தத் தன்மை கூட WEIRD ஆக இருக்குமோ?
ஏகாந்தம்
பலரோடோ அன்றில் சிலரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது, சில நிமிடங்கள்தான் முழுமையாக நான் அங்கு இருப்பேன். பின்னர் நான் மட்டும் அங்கு இருக்க, எனது நினைவுகளும், சிந்தனைகளும் வேறெங்காவது பறந்து விடும். நடந்தவை, நடக்கப் போவதான கற்பனை... ஏதோ ஒன்றுடன் நான் லயித்து விடுவேன். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதே என் காதிலோ, சிந்தனையிலோ விழாது. இதனால், என்னைச் சுற்றி உள்ளவர்களின் "என்ன உலகம் சுற்றப் போய் விட்டாயா? கனவு காண்கிறாயா? எந்த உலகத்தில் நிற்கிறாய்? ....? " என்பது போன்றதான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது அசடு வழிவது உண்டு.
இது தொலைக்காட்சி பார்க்கும் போதும் வானொலி கேட்கும் போதும் கூட நடக்கும். கண்கள் தொலைக்காட்சியில் இருக்கும். கவனம் வேறெங்கோ நிலைத்திருக்கும்.
மறதி
செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைக் கூட மறந்து விடுவது. மறக்கக் கூடாது என்று நினைவாகத் துண்டுப் பேப்பரில் எழுதி, கண்ணுக்குத் தெரியக் கூடிய இடத்தில் குத்தி வைத்து விட்டு துண்டை கவனத்தில் எடுத்துப் பார்க்கவே மறந்து விடுவது.
இஸ்திரிப்பெட்டியின் பிளக்கைக் களற்றினேனா, மின்சார அடுப்பை அணைத்தேனா, வீட்டுக்கதவைப் பூட்டினேனா, கார்லைற்றை நிற்பாட்டினேனா... என்றெல்லாம் அநாவசியமாகக் குழம்புவது. ஆனால் அவையெல்லாம் எந்த சிந்தனைக்கும் இடமின்றி தன்பாட்டிலே நடந்திருக்கும்.
ஞாபகசக்தி
இத்தனை மறதிகள் மத்தியில் பழசுகள் எதுவுமே மறக்காமல் இருப்பது. சின்னவயது சம்பவங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டுமாய் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அதையும் விட எண்கள். எனது நண்பர்கள், உறவினர்கள் சக வேலையாட்கள்.. என்று எல்லோரது தெலைபேசி எண்களுமே, அது எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை, எல்லாமே எனக்கு மனப்பாடம். (இத்தனைக்கும் நான் யாருக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுவது இல்லை) பிறந்தநாட்களும் அப்படியே. தெரிந்தவர்களின் கார் இலக்கங்கள் கூட மறப்பதில்லை.
யாராவது முன்னர் எப்போதாவது எனக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாலும், எனது தொலைபேசியில் அந்த இலக்கம் விழும் பட்சத்தில் அவர் சில வருடங்கள் கழித்து அழைப்பை மேற்கொள்ளும் போது அந்த இலக்கத்தை வைத்தே இன்னார்தான் என்று கண்டு பிடித்து விடுவேன்.
பிடிக்காதது
துப்பரவாகப் பிடிக்காத விடயம் தொலைபேசுவதும், தொலைபேசியில் அலட்டுவதும். தொலைபேசி சிணுங்கினால் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே தொலைபேசியை எடுப்பேன். கதைக்கும் போது அலட்டினால் முன்னர் என்றால் பேனாவால் பக்கத்தில் உள்ள பேப்பர் எல்லாம் கிறுக்கித் தள்ளி விடுவேன். இப்போதென்றால் அவர்களுக்கு ம்... கொட்டிக் கொண்டு, கணினியின் முன் போயிருந்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இனியில்லை என்ற அவசிய தேவைகள் இன்றி அம்மா, எனது குழந்தைகள், மிஞ்சினால் எனது சகோதரர்கள் தவிர்ந்த வேறு யாருக்கும் தொலைபேசி எடுக்க மாட்டேன். இதனால் பலரது, அதாவது மிக நெருக்கமான உறவுகளின் அதிருப்திக்குக் கூட ஆளாகியிருக்கிறேன்.
தொந்தரவு
எந்த நேரமும் பாட்டுக் கேட்க வேண்டும். எந்த சீரியஸான வேலையில் இருந்தாலும் பரவாயில்லை. பாட்டு வேண்டும். ரேடியோ ஒலிக்கா விட்டால் என்னில் ஏதோ ஒன்று குறைந்து விட்டது போல உணர்வேன். சோர்வாகி விடுவேன். சின்னவயதில் படிக்கும் போது கூடப் பாட்டுப் போட்டு விட்டுத்தான் படிப்பேன். இப்போதும் படுக்கும் போதும் பாட்டு வேண்டும். இது ஆரம்பத்தில் எனது கணவரைத் தொந்தரவு செய்வதாகவே இருந்திருக்கிறது. "இதென்ன தேத்தண்ணிக் கடையே? இராப்பகலா..." என்ற அவரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். இப்போது என்னோடு சேர்ந்து அவரும் பழகி விட்டார்.
தவிர்க்க முடியாத இன்னும் சில
#கவலையோ, சந்தோசமோ எதுவாயினும் டயறி போல எழுதித் தள்ளி விடுவது.
#எங்கு போனாலும் புத்தகங்கள் வாங்குவது.
#ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி விடுவது.
#எதைக் கொடுத்தாலும் புத்தகங்களை இரவல் கொடுக்க மனம் சம்மதிக்காதது.
#உடுப்பு அலுமாரியில் ஒரு உடுப்பின் மடிப்பு சற்றுக் கலைந்திருந்தாலும், மீண்டும் மீண்டுமாய் அதை எடுத்து மடித்து வைப்பது.
#தொலைக்காட்சியின் முன் 15 நிமிடங்களுக்கு மேல் விழித்திருக்க முடியாமல் நித்திரையாகி விடுவது.
#யாருடையதாவது வீட்டுக்கு விருந்தினராகச் சென்று விட்டு, அவர்களின் வரவேற்பறையில் மணிக்கணக்கில் இருந்து கதைப்பதை எந்த வகையிலும் ரசிக்க முடியாமல் நித்திரை தூங்கி விடுவது.
கவலையானது
தனிமையிலோ அன்றிப் பலர் நடுவிலோ எப்போதும் மனதுக்குள் ஏதாவது நல்ல கதைகள், கவிதைகள் என்று புனைந்த படியே இருந்து விட்டு, வீட்டுக்கு வந்த பின் அதை எழுத நினைக்கும் போது எழுத முடியாமல் அந்தப் புனைவுகள் கலைந்து போய் விடுவது.
அந்தந்த நேர உணர்வுகளின் எழுச்சியில், மனதின் ஆழத்திலிருந்து எழும் விடயங்களை அழகாக எழுதத் தொடங்கி, சில பக்கங்களை நிரப்பி விட்டு, அவைகளை முடிக்க முடியாமலே விட்டு விடுவது.
ரசனை
தெளிந்த நீரோடை, நீலவானம், பனிப்போர்வை, வண்ணப்பூக்கள்.. அழகிய குழந்தைகள்... எதைக் கண்டாலும் அவைகளின் அழகில் மனம் சொக்கி அப்படியே லயித்து நடுரோட்டில் கூட நின்று விடுவது.
செல்லி என்னை அழைத்ததால் WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் விளங்காமலே இதை எழுதினேன். மிக அதிகமாகவே எழுதி விட்டேன் போலிருக்கிறது. செல்லி ஏன் அழைத்தேன் என்று தலையிலே கை வைக்காது விட்டால் சரி.
சந்திரவதனா
ஜேர்மனி
2.4.2007