Tuesday, August 02, 2011

முந்தி வடிவாய் இருந்தவள்!

நான் வேலை பார்க்கும் வங்கியில் வருடாவருடம் நத்தார் தினத்துக்கு சில நாட்கள் முன்பாக அங்கு வேலை பார்த்து ஓய்வில் சென்றவர்களை அழைத்து விருந்துபசாரம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது சில வருடங்களாக அவர்களை வரவேற்று உபசரிப்பதற்கு தெரிவாகும் வெள்ளை நிற ஜேர்மனியப் பெண்களுக்குள் கறுப்பாக நானும் ஒருத்தி இருந்தேன்.

அது உண்மையில் ஒரு சந்தோசமான பொழுது. மிகவும் வயதானவர்கள் (80-90). அப்போதுதான் 63-65 ஐத் தாண்டியவர்கள் என்று 63க்கு மேற்பட்ட வயது கொண்ட பலரும் வருவார்கள். குழந்தைகள் போல சிலர் நடந்து கொள்வார்கள். மிகவும் அன்பாகவும், ஆசையாகவும் எம்மோடு பேசிக் கொள்வார்கள். அப்படித்தான் கடந்த விருந்துபசாரத்திலும் நானும் மற்றவர்களுமாக அவர்களுக்கு தேநீர், கோப்பியுடன் விதவிதமான Cakes ஐப் பரிமாறிக் கொண்டும், அருகிலிருந்து கதைத்துக் கொண்டும்.. என்று பொழுதை இனிமையாகக் கழித்துக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான், சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வில் சென்ற என்னை நன்கு தெரிந்த ஒரு பெண், எமது வங்கியின் வேறொரு கிளையில் இருந்து ஓய்வில் சென்ற இன்னொரு பெண்ணுக்கு என்னைக் காட்டி “இவள் முந்தி நல்ல வடிவாய் இருந்தவள்“ என்றாள்.

சந்திரவதனா
29.7.2011