Sunday, March 08, 2015

Fatou Mandiang Diatta


என்னால் இன்னும் அந்த வலியையும், இரத்தத்தையும் நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது. எனது அம்மா சொன்னாள் என்னை அழக்கூடாது என்றும், நான் அழுதால் எமது குடும்ப கௌரவத்தில் கறை படிந்து விடும் என்றும்.

ஏறக்குறைய 30 வருடங்களின் முன், அப்போது எனக்கு நான்கு வயதுகள்தான் இருக்கும். ஒரு வயதான பெண் எனது பெண்உறுப்பை வெட்டிச் சிதைத்தாள். மயக்க மருந்து இல்லாமலே அது நடந்நது. அந்த நேரத்தில் நான் எனது இரு உதடுகளையும் இறுக அழுத்திக் கொண்டிருந்தேன்.

எனது பெயர் Fatou(Fatou Mandiang Diatta). நானும் எல்லா சேனேகல் பெண்களையும் போல வெட்டப்பட்டவள் தான். சிறுமிகளுக்கு விருத்தசேதனம் செய்தே ஆக வேண்டும். அப்படித்தான் குர்ஆன் சொல்கிறது. செய்யாவிட்டால் அவர்களுக்கு கணவன் கிடைக்க மாட்டான். ஏனெனில் அவர்கள் தூய்மை அற்றவர்கள். உண்மையற்றவர்கள்.

இப்போது நான் ஒரு முழுமையான பெண் இல்லை. எப்போதும் எதையோ ஒன்றை இழந்தது போலவே நான் உணர்கிறேன். எனது பாடல்கள்தான் என்னை ஆற்றுகின்றன.

செனேகலில் 1982 இல் பிறந்து, 2006 இலிருந்து ஜெர்மனியில் பேர்லினில் வாழும் Fatou Mandiang Diatta இன்று ஒரு ராப் இசைப்பாடகி. தனது கோபங்களையெல்லாம் பாடல்களில் வெளிப்படுத்துகிறாள். தனது பாடல்களாலும், கல்வியாலும் அந்த காட்டுமிராண்டித் தனமான பாரம்பரியத்துக்கு எதிராகப் போரிடும் நோக்குடன் நான்காவது முறையாக தற்போது தனது தாயகத்திற்குத் திரும்பியுள்ளாள்.

(உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலகில் பிறப்புறுப்பு விருத்தசேதனம் என்ற காட்டுமிராண்டித்தனத்தால் 125 மில்லியன் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.)

"Ich bin eine Überlebende"