Friday, July 17, 2015

சாதல் என்பது...

பெண்களின் மனஉணர்வுகளை ஆண்களும், ஆண்களின் மனஉணர்வுகளைப் பெண்களும் எழுதித்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஒரு கணவன் தனது உண்மையான மனஉணர்வுகள் எல்லாவற்றையும் தனது மனைவியிடம் சொல்லி விடுவதில்லை. மனைவியும்தான். சொன்னால் பிரச்சனையாகி விடும் என்பதுதான் அதற்கான முக்கிய காரணம்.

 வாசித்தலில் கூட மனம் ஒட்டாத ஒரு பொறுமையின்மையான நேரத்தில் இன்று தற்செயலாக பொ. கருணாகரமூர்த்தியின் சாதல் என்பது... என் கண்களில் பட்டது. கருணாகரமூர்த்தியினது என்பதால் அலையும் மனதை இழுத்து நிறுத்தி வாசித்தேன்.

இம்மாத காலச்சுவடில் பிரசுரமாகியுள்ளது.

 கற்பனைகளை விட உண்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பவை பொ. கருணாகரமூர்த்தியின் படைப்புகள். இந்தப் படைப்பு மனதில் மெல்லிய சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. ஒருவித மனக்கவலையுடன் எழுதப்பட்டது போன்றும் தோன்றியது. கூடவே ஒரு ஆணின் உணர்வுகளும், சபலங்களும் தயங்காது எழுதப்பட்டிருந்தது.

எழுத்தின் போக்கு ஏனோ மனதை நெருடுகிறது. கருணாகரமூர்த்தி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

17.7.2015


சாதல் என்பது...
பொ. கருணாகரமூர்த்தி
 http://kalachuvadu.com/issue-187/page64.asp