Thursday, August 14, 2003

நட்பென்றுதானே நம்பினேன்.....!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்......?

சந்திரவதனா 12.12.2001

2 comments:

  1. நட்பின் அருமையை நன்று அறிந்த ஜீவன்களில் நானும் ஒருவன். வலியை கவிதையில் உணரக்கூடியதாக இருக்கின்றது. அனுபவத்தில் ஒரு படி என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete