Monday, September 29, 2003

பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..?

திரைப் படப் பாடல்களில் பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..? கருத்தாழம் மிக்கவை...? என்ற சர்ச்சை யின் போது.............
அனேகமானவர்கள் பழைய பாடல்களே சிறந்தது. கருத்தாழம் மிக்கது.
இலக்கியம் நிறைந்தது. என்று கூறும் போது எனக்கு சற்று எரிச்சலே வருகிறது.

நான்-
பழையபாடல்கள்
இடைக்காலப்பாடல்கள்
புதியபாடல்கள்
மிகப் புதியபாடல்கள்
எல்லாவற்றையும் விரும்பிக்கேட்டு ரசிக்கிறேன்.

நான் பார்த்த வரையில் இன்றைய பாடல்களில்
கவித்திறன், சுவை, அழகு, இசை------என்று எல்லாமே மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன.
அதையேன் பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
தற்போதைய பாடல்களில் விரசம் நிறைந்துள்ளன என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். ஓம்-சில பாடல்கள் விரசம் நிறைந்துதான் உள்ளன. நான் இல்லையென்று சொல்லவில்லை.

அதேநேரம் முந்தைய பாடல்களிலும் இரட்டை அர்த்தம் தொனிக்க விரசம் நிறைந்த பல பாடல்கள் இருப்பதை நான் கவனித்துள்ளேன். இது மற்றவர்கள் கண்களுக்குப் படவில்லையோ என்னவோ!

இன்றைய பாடல்களில் எத்தனையோ பாடல்கள் மிகவும் அழகாகவும் இலக்கிய நயத்துடனும் எழுதப்பட்டுள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது.

ஓன்று - இளமைக்காலத்தில் நாம் கேட்ட பாடல்கள் எம்மனதில் மிக ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அவைகளை நாம் எந்த வயதிலும் மறந்து விடமாட்டோம்.
எத்தனை வருடங்களின் பின் அப்பாடல்களைக் கேட்டாலும் எம்முள் ஒரு இனம் புரியாத இன்பக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதை வைத்துக் கொண்டு இன்றையபாடல்கள் சரியில்லை என்பதும் அன்றைய பாடல்கள்தான் அருமை என்பதும் தவறானது.

சந்திரவதனா செல்வகுமாரன்.

No comments:

Post a Comment