சில வாரங்களாக வலைப்பூக்களோடு முழுமையாகச் சங்கமிக்க முடியாதிருந்தது.
ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது.
மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.03 காலப் பகுதிக்குள் நான் ஏதோ தட்டுத் தடுமாறிய பின்---
மீனாக்சி, பரிமேழகர், சுபா, காசி என்று வந்து சுவாரஸ்யமான முறையில் வலைப்பூக்களின் அழகைத் தொகுத்துத் தந்தார்கள்.
இவ்வாரம் வெங்கட்ரமணி. அசத்துவார் என்றே நம்பிக்கை.
அத்தோடு, காசி எங்கள் வீட்டுச் சிந்துவின் வருகைக்கு வலைப்பூக்களினூடே வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவருக்கு மிகவும் நன்றி.
Monday, October 27, 2003
Friday, October 24, 2003
எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ
எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது.
Sinthu born on 20.10.2003 at 7.23PM in London.
நானும் எனது கணவரும் எமது பேரக் குழந்தை சிந்துவுடன்.
புதிய வரவோடு நாம்....
Monday, October 13, 2003
லண்டனில் நிறையப் பார்க்கிறேன்.
Edmonton என்ற போர்வீரன் யேர்மனியருடனான போரிலே மடிந்து போன இடமாகிய Edmonton இலிருந்து கொண்டு நேற்று முன்தினம் Blue Water க்குப் போய் வந்தோம். போகும்போதும் வரும்போதும் தேம்ஸ்நதிக்கு மேலால் கட்டப் பட்டிருக்கும் பாலத்தைக் கடக்கும் போது 1£ கொடுக்க வேண்டும'
The Big Ben, London, United Kingdom.
Tower bridge, London, United Kingdom.
இது பற்றியும் நேற்றுப் போன Big Ben, Tower Bridge, London Bridge, உண்ணாமல் கிரெயினில் தொங்கிக் கொண்டிருக்கும் டேவிட்... இவைகள் பற்றியும் நிறைய எழுத வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால் லண்டன் கீபோர்ட்டில் எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன். யேர்மனியக் கீபோர்ட்டுடன் பரிச்சயப் பட்ட எனது விரல்கள் அடிக்கடி ண வை ல வென்றும் ல வை ண வெனறும் மட்டுமல்லாமல் இன்னும் பல எழுத்துக்களோடு மாரடிக்கின்றன. அதனால் யேர்மனிக்குத் திரும்பிய பின் இவை பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.
The Big Ben, London, United Kingdom.
Tower bridge, London, United Kingdom.
இது பற்றியும் நேற்றுப் போன Big Ben, Tower Bridge, London Bridge, உண்ணாமல் கிரெயினில் தொங்கிக் கொண்டிருக்கும் டேவிட்... இவைகள் பற்றியும் நிறைய எழுத வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால் லண்டன் கீபோர்ட்டில் எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன். யேர்மனியக் கீபோர்ட்டுடன் பரிச்சயப் பட்ட எனது விரல்கள் அடிக்கடி ண வை ல வென்றும் ல வை ண வெனறும் மட்டுமல்லாமல் இன்னும் பல எழுத்துக்களோடு மாரடிக்கின்றன. அதனால் யேர்மனிக்குத் திரும்பிய பின் இவை பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.
Friday, October 10, 2003
7.10.2003
Frankfurt Hahn - Germany
இணையத்தளஙகளில் தேடியதில லண்டனுககுப் பறப்பதற்கான விமானச்சீட்டு Frankfurt Hahn Airport இலிருநது London Stansted Airport க்கு 9.99 Euroக்கும்,
லண்டனிலிருந்து திரும்புவதற்கான விமானச்சீடடு 1.99 Euroக்கும் கிடைத்ததால் இம்முறை Stuttgart Airport ஐத தவிர்க்க வேண்டியதாயிற்று.
எமது Schwaebisch Hall இலிருந்து Frankfurt Hahn 270 கிலோமீற்றர் தூரத்தில். திட்டமிட்டபடி Frankfurt Hahn Airport இல் போயிறங்கிய போது மழையும் காற்றும் எம்மை குளிரோடு வரவேற்றன. car் தரிப்பிடத்துக்கும் விமானநிலையத்துக்குமிடையிலான தூரம் சற்று அதிகமானது போல இருந்தது.
விமானததில் ஏறும் போது மழையில் நன்றாகவே தோய்நதிருந்தோம்.
Rynair விமானம்
Frankfurt Hahn இலிருந்து புறப்படும் Rynair விமானத்துள் எமக்கென இருக்கைகள் பதிவு செய்யப் பட்டு இருக்க மாட்டாதென்பதை விமானத்துள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டோம். பேடூந்தினுள் இடம் பிடிப்பது போல இருக்கைகளைத் தேர்ந்து கொண்டோம்.
பயண நேரம் ஒன்றிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள்தான் என்பதால் சிரமம் எதுவும் இருக்கவில்லை. மற்றைய விமானங்களில் போல இதனுள் உணவு உபசரிப்பும் இருக்கவில்லை. அது அவசியப் படவும் இல்லை.
Plans involve new runways at Stansted Airport
Stansted விமான நிலையம் எனக்குப் புதிது.
யேர்மனியிலிருந்து லண்டனுக்கான விமானக் கட்டணம் மிகவும் சொற்பம் தான்.
ஆனால் லண்டன் Stansted இலிருந்து Edmonton க்குப் பயணிப்பதற்கான train கட்டணம் எனக்கும எனது கணவருக்குமாக 46£
Stansted Express, London Liverpool Street Station
Monday, October 06, 2003
பயணம்
எழுத நினைத்து எழுதாமல் போனவைதான் பல.
என்றைக்கோ நடந்தவைகள் நினைவுகளில் மீட்டப் பட்டு
மீண்டும் பதிவாவது போல
இன்று எழுதாமல் விடுபட்டவை என்றைக்காவது ஒருநாள் பதிவாகும்.
இன்னும் சில மணிநேரங்களில் லண்டன் நோக்கிப் பயணிக்கப் போகிறேன்.
மீண்டும் இங்கு வரும் போது லண்டன் பற்றிய ஏதாவது புதிய செய்திகள் இருந்தால்
கொண்டு வருகிறேன்.
என்றைக்கோ நடந்தவைகள் நினைவுகளில் மீட்டப் பட்டு
மீண்டும் பதிவாவது போல
இன்று எழுதாமல் விடுபட்டவை என்றைக்காவது ஒருநாள் பதிவாகும்.
இன்னும் சில மணிநேரங்களில் லண்டன் நோக்கிப் பயணிக்கப் போகிறேன்.
மீண்டும் இங்கு வரும் போது லண்டன் பற்றிய ஏதாவது புதிய செய்திகள் இருந்தால்
கொண்டு வருகிறேன்.
Saturday, October 04, 2003
மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற
சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி........
இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம்
அருமையான பாடற் காட்சி.
கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.
மீண்டும் கோகிலா படத்தில் இந்த ஜோடிகள் இணைந்தது மட்டுமல்லாமல் பெண் பார்க்கும் படலமும் சற்று வித்தியாசமாக சந்தோசமான முறையில் சித்தரிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும்.
உண்மையில் எப்படியோ.....? இந்தியத் திரைப் படங்களில் அப்படித்தான் காட்டுகிறார்கள்.
பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும்.
வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு
பெண் கூனா, குருடா, செவிடா...... என்று ஆராய, அவளை ஆடு.. பாடு.. என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வது அபத்தமாகப் பெண்ணை அவமதிப்பது போலாக இருக்கும்.
இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது.
ஆனால் கமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதம் அருமையாக உள்ளது. அழகாக உள்ளது.
மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது
இந்தச் - சின்னஞ் சிறு வயதினிலே....... என்ற பாடலைத்தான் பாடுகிறார்.
பாடல் தொடங்கும் போதே ஜானகியின் இனிய குரல் அற்புதமாக எம்மைத் தழுவுகிறது. அந்த இனிமையை நாம் ரசிக்க, படத்தில் மாப்பிள்ளையாக வந்த கமலும் அதை ரசிக்கத் தொடங்கி விடுவது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது. செயற்கைத் தன்மை இல்லாமல் பெற்றோருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இராமல் பெண்ணை மதிப்பதாகக் காட்டி பார்ப்பவர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.
பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு - இடையில் - பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமல் தொடர்ந்து பாடுவதாய் காட்சி அமைகிறது.
கமல் பாடத் தொடங்கியதும் சிறீதேவி தனக்குள் தோன்றிய ஆச்சரியத்தையும் பரவசத்தையும் காட்டும் விதம் - அந்த முகபாவம் - அற்புதமாய் அமைந்துள்ளது. சிறீதேவியின் நடிப்புத்திறன் அழகாய் வெளி வருகிறது.
தொடரும் பாடலில்
பாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை - இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை - தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை... இன்னும் வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை... என்று நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனக் காட்டப் பட்டது இனிமையான ஆச்சரியத்தைத் தருகிறது.
காதல் நெருப்பினிலே என் கண்களை விட்டு விட்டேன்....
மோதும் விரகத்திலே..... என்ற கட்டத்தில் குழந்தையொன்று கமலின் மடியை நனைத்து விடும். அது கூட சுவாரஸ்யமாக உள்ளது.
மொத்தத்தில் சாதரணமாக நடக்கக் கூடிய விடயங்கள் பாடலுடன் இணைக்கப் பட்டு, கமலும் சிறீதேவியும் அருமையாக நடித்து, அருமையான இசையுடன் யேசுதாஸ் ஜானகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதில் இனிமையைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு இனிய பாடலாக அமைந்துள்ளது.
சந்திரவதனா - யேர்மனி - 24.1.01
சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி........
இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம்
அருமையான பாடற் காட்சி.
கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.
மீண்டும் கோகிலா படத்தில் இந்த ஜோடிகள் இணைந்தது மட்டுமல்லாமல் பெண் பார்க்கும் படலமும் சற்று வித்தியாசமாக சந்தோசமான முறையில் சித்தரிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் பெண் பார்க்கும் படலம் ஒரு நாடகம் போலவே அமைந்திருக்கும்.
உண்மையில் எப்படியோ.....? இந்தியத் திரைப் படங்களில் அப்படித்தான் காட்டுகிறார்கள்.
பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, முறுக்கு, பலகாரம் என்று செய்து வைத்துக் காத்திருக்க மாப்பிள்ளை ஒரு பொம்மை போல வருவார். அவரை இயக்கி வைப்பது அவரது பெற்றோராகத்தான் இருக்கும்.
வந்து இருந்து கொண்டு பெண் வீட்டார் செய்து வைத்த பலகாரங்களைச் சுவைத்துக் கொண்டு
பெண் கூனா, குருடா, செவிடா...... என்று ஆராய, அவளை ஆடு.. பாடு.. என்று ஆட்டுவித்துவிட்டு வீட்டுக்குப் போய் முடிவு சொல்வதாகச் சொல்லிச் செல்வது அபத்தமாகப் பெண்ணை அவமதிப்பது போலாக இருக்கும்.
இப் படத்திலும் பஜ்ஜி, சொஜ்ஜியிலிருந்து பாடுவது வரை எல்லாம் நடக்கிறது.
ஆனால் கமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதம் அருமையாக உள்ளது. அழகாக உள்ளது.
மணப்பெண்ணான சிறீதேவி பெண் பார்க்கும் படலத்தின் போது
இந்தச் - சின்னஞ் சிறு வயதினிலே....... என்ற பாடலைத்தான் பாடுகிறார்.
பாடல் தொடங்கும் போதே ஜானகியின் இனிய குரல் அற்புதமாக எம்மைத் தழுவுகிறது. அந்த இனிமையை நாம் ரசிக்க, படத்தில் மாப்பிள்ளையாக வந்த கமலும் அதை ரசிக்கத் தொடங்கி விடுவது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது. செயற்கைத் தன்மை இல்லாமல் பெற்றோருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இராமல் பெண்ணை மதிப்பதாகக் காட்டி பார்ப்பவர்களின் மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது.
பாடிக் கொண்டு போகும் போது சிறீதேவிக்கு - இடையில் - பாடல் மறந்து விடுகிறது. வழமையான பாடல்களில் என்றால் இதுவே கெட்ட சகுனமாக்கப் பட்டு கல்யாணம் நிறுத்தப் பட்டு விடும். ஆனால் இங்கே கமல் தொடர்ந்து பாடுவதாய் காட்சி அமைகிறது.
கமல் பாடத் தொடங்கியதும் சிறீதேவி தனக்குள் தோன்றிய ஆச்சரியத்தையும் பரவசத்தையும் காட்டும் விதம் - அந்த முகபாவம் - அற்புதமாய் அமைந்துள்ளது. சிறீதேவியின் நடிப்புத்திறன் அழகாய் வெளி வருகிறது.
தொடரும் பாடலில்
பாட்டி வெற்றிலை பாக்கு இடிக்கும் ஓசை - இடித்த வெற்றிலை பாக்கை துளாவியெடுக்கும் ஓசை - தாத்தா வெற்றிலை பாக்கை வாய்க்குள் போட்டுக் குதப்பும் ஓசை... இன்னும் வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டில் வைக்கும் ஓசை... என்று நாளாந்தம் நாம் கேட்கும் ஓசைகள் பாட்டுடன் இணைக்கப் பட்டு அந்த ஓசைகள் கூட இசைகள்தான் எனக் காட்டப் பட்டது இனிமையான ஆச்சரியத்தைத் தருகிறது.
காதல் நெருப்பினிலே என் கண்களை விட்டு விட்டேன்....
மோதும் விரகத்திலே..... என்ற கட்டத்தில் குழந்தையொன்று கமலின் மடியை நனைத்து விடும். அது கூட சுவாரஸ்யமாக உள்ளது.
மொத்தத்தில் சாதரணமாக நடக்கக் கூடிய விடயங்கள் பாடலுடன் இணைக்கப் பட்டு, கமலும் சிறீதேவியும் அருமையாக நடித்து, அருமையான இசையுடன் யேசுதாஸ் ஜானகியின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதில் இனிமையைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு இனிய பாடலாக அமைந்துள்ளது.
சந்திரவதனா - யேர்மனி - 24.1.01