சில வாரங்களாக வலைப்பூக்களோடு முழுமையாகச் சங்கமிக்க முடியாதிருந்தது.
ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது.
மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.03 காலப் பகுதிக்குள் நான் ஏதோ தட்டுத் தடுமாறிய பின்---
மீனாக்சி, பரிமேழகர், சுபா, காசி என்று வந்து சுவாரஸ்யமான முறையில் வலைப்பூக்களின் அழகைத் தொகுத்துத் தந்தார்கள்.
இவ்வாரம் வெங்கட்ரமணி. அசத்துவார் என்றே நம்பிக்கை.
அத்தோடு, காசி எங்கள் வீட்டுச் சிந்துவின் வருகைக்கு வலைப்பூக்களினூடே வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அவருக்கு மிகவும் நன்றி.
No comments:
Post a Comment