பிறப்புக்கு அர்த்தம் சொன்ன
தூய தாயகன் பிரபாகரன்
தலைவர்கள் எல்லோருமே
மக்கள் மனதில்
நிலை கொள்வதில்லை
இவன் நிலை கொண்டவன்
அண்ணனாய்
ஆசானாய்
தம்பியாய்
தந்தையாய்
மைந்தனாய்....
மக்களோடு மக்களாய் நின்று
தலைமைக்கு அர்த்தம் சொன்னவன்
தமிழனின்
அடிமைத் தளையறுக்க என்றே
அவதரித்தவன்
பாட்டுக்களும் கவிதைகளும்
பெண்ணடிமை பற்றிப் பேச
செயலால்
பெண்ணடிமை விலங்கொடித்தவன்.
இவன் வெறுமனே
தலைவனல்ல
தமிழன்
தலை நிமிர்ந்து நிற்க
காலம் எமக்களித்த
வரலாற்று நாயகன்
பிறப்புக்கு அர்த்தம் சொன்ன
தூய தாயகன்.
இவனை வாழ்த்துவதில்
பெருமை யடைகிறேன்!
பேருவகை கொள்கிறேன்!
No comments:
Post a Comment