Wednesday, November 26, 2003

பிறப்புக்கு அர்த்தம் சொன்ன........


பிறப்புக்கு அர்த்தம் சொன்ன
தூய தாயகன் பிரபாகரன்


தலைவர்கள் எல்லோருமே
மக்கள் மனதில்
நிலை கொள்வதில்லை
இவன் நிலை கொண்டவன்

அண்ணனாய்
ஆசானாய்
தம்பியாய்
தந்தையாய்
மைந்தனாய்....
மக்களோடு மக்களாய் நின்று
தலைமைக்கு அர்த்தம் சொன்னவன்

தமிழனின்
அடிமைத் தளையறுக்க என்றே
அவதரித்தவன்

பாட்டுக்களும் கவிதைகளும்
பெண்ணடிமை பற்றிப் பேச
செயலால்
பெண்ணடிமை விலங்கொடித்தவன்.

இவன் வெறுமனே
தலைவனல்ல
தமிழன்
தலை நிமிர்ந்து நிற்க
காலம் எமக்களித்த
வரலாற்று நாயகன்
பிறப்புக்கு அர்த்தம் சொன்ன
தூய தாயகன்.

இவனை வாழ்த்துவதில்
பெருமை யடைகிறேன்!
பேருவகை கொள்கிறேன்!

செல்வராஜ் இத்தனை அக்கறையுடன் செயற் படுவாரென.....

நான் எதிர் பார்க்கவில்லை.

16.11.2003 அன்று மனஓசை பகுதியில் நான் எழுதிய விடயமொன்று
ம�..... விடிந�த� விட�டதா..?
நேற�ற� ம�ன� தினம� அஸ�ஸெம�பிலி மீற�றிங�. வீட� வந�த� சேர நேரமாகி விட�டத�. வழமையில� வர�டத�தில� ஒர� நாள�தான� இப�படி அட�டகாசமாக.................

இப்படிச் சிதைந்து விட்டது.

யாருமே அதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றுதான் நினைத்தேன்.
ஆனால் செல்வராஜ் கவனித்தது மட்டுமல்லாமல் அதை சரிசெய்து எனக்கு அனுப்பியும் உள்ளார்.
புலம்பெயர்வாழ்வின் இறுக்கத்தில் முகம் தெரியாத உறவுகள் இப்படி உதவி செய்ய முன் வரும் போது உண்மையிலேயே மனசு மிகவும் இலேசாகி சந்தோசத்தில் பறக்கத் தொடங்கி விடுகிறது. அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

கீழே நான் எழுதிச் சிதைந்த விடயத்தை செல்வராயுக்கு நன்றி கூறிக் கொண்டு மீண்டும் தருகிறேன்.

16 November 2003

விடிந்து விட்டதா..?
நேற்று முன் தினம் அஸ்ஸெம்பிலி மீற்றிங். வீடு வந்து சேர நேரமாகி விட்டது. வழமையில் வருடத்தில் ஒரு நாள்தான் இப்படி அட்டகாசமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் எமது பழைய தலைமையதிகாரி ஓய்வில் சென்று விட புதிய தலைமையதிகாரி வந்து ஒரே அட்டகாசம்தான். இது இவ்வருடத்தின் மூன்றாவது அட்டகாசமான அஸ்ஸெம்பிலி மீற்றிங்.

காரியதரிசியைத் தொடர்ந்து தலைமையதிகாரியே கிறிஸ்மஸ் போனஸ், சம்பள உயர்வு, விடுப்பு விதிகள்.... என்று எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார். வயதில் குறைந்தவர். அதுதான் ஒவ்வொருவராகப் பேச விட்டு எமக்குக் கொட்டாவியை வரப் பண்ணாது தானே முடித்து விட்டார். பிறகென்ன சாப்பாடுதான். உறைப்புத் தவிர்ந்த மற்றைய எல்லாச் சுவைகளையும் கொண்ட Buffet.

எல்லாமாக 368பேர் சமூகமளித்திருந்தோம். இவ்வளவு பேரும் Buffet இல் சாப்பாடு எடுப்பதென்றால் சும்மாவா...? மிக நீண்ட வரிசை. எமது தலைமையதிகாரியும்தான் அந்த வரிசையில் ஒருவராக நின்றார்.

வான்கோழி இறைச்சியும், பன்றி இறைச்சியும் யேகர் ஷோசுடனும், Zwiebel ஷோசுடனும்(வெங்காய ஷோஸ்) ஒரு புறம் இருந்தாலும் நான் சைவப் பகுதிக்கே சென்றேன். அங்கு நிறைய items இருந்தன.

எனக்கு யேர்மனியர்களின் சாப்பாடுகளில் மிகவும் பிடித்தவைகளில் ஒன்று அவர்களது kartoffelsalat. (உருளைக்கிழங்கு சலாட்). நாங்கள் சோறு சாப்பிடுவது போல அவர்கள் உருளைக்கிழங்கை பல விதமாகவும் சமைத்து முக்கிய உணவாகச் சாப்பிடுவார்கள். அந்த வகைகளில்

இந்த உருளைக்கிழங்கு சலாட் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

மெல்லிய புளிப்புக் கலந்த சுவை அதற்கு. அதனோடு வேறும் பலவிதமான சலாட்கள் இருந்தன. பொதுவாக கோவாவை நாம் சுண்டிச் சாப்பிடுவோம். அல்லது பால்கறி வைப்போம். ஆனால் யேர்மனியர்கள் சலாட் செய்வார்கள். மெல்லிய புளிப்புக் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த சலாட்டை கிறீக் ரெஸ்ரோறண்டுகளிலும் சாப்பிடலாம்.
ஒரு பிடிபிடித்தேன்.

பிறகு Dessert. அதிலும் பல items. தோடம்பழ கிறீம், மாம்பழ-தயிர் கிறீம், வறுத்த அப்பிள், fruit salat........ என்று பழங்களிலேயே பலசுவை. இவற்றில் தனித்துவமாகத் தெரிந்தது மாம்பழத் துண்டுகளுடன் தித்தித்த Mango -Joghurt Creme.

மாம்பழத் துண்டுகளுடன் தித்தித்த Mango -Joghurt Creme

திருவிழாவில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படும் படியாக 368 பேரும் ஓடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் திரிந்தார்கள். சந்தோசமான பொழுது.

விரைவில் நத்தார் தினத்தை ஒட்டி இன்னொர் சந்திப்பு இதே அட்டகாசத்துடன் நடக்கும்.