வாராவாரம் மின்னஞ்சலில் வந்து சேரும் வெங்கடேஷின் இவ்வார மின்னிதழில் வந்த அவரது என் எழுத்து: சில எண்ணங்கள் சுவையாக இருக்கிறது.
அதில் வரும் கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த பரவசம் அவருக்கு மட்டுமல்ல. பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
தன் சொந்த அனுபவம் போன்ற பிரமைப்பாட்டுடன்
சுவையான கதைகளை ரசனை கலந்து தரும் சத்யராஜ்குமாரின்
என்னை எழுதியவர்கள் தொடர் ஒன்று தமிழ்ஓவியத்தில் ஆரம்பித்திருக்கிறது.
அவரது சுயஅனுபவம் என்றாலும் அவருக்கேயுரிய பாணியில் சுவையோடு ஆரம்பித்திருக்கிறார். நிட்சயம் அது எமக்கு நல்ல விருந்தாகும் என்ற நம்பிக்கை எனக்கு.
168 பின்னூட்டங்கள் வந்த சுந்தரவடிவேலின் வலைப்பதிவைப் பார்த்தேன். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ராஜா அறிமுகப் படுத்தியிருந்தார். ரமணீதரன், மெய்யப்பன், கார்த்திரமாஸ், ஈழநாதன், செல்வராஜ் எல்லோரும் பின்னூட்டங்களிலேயே ஒரு கவியரங்கம் நடத்தியிருக்கிறார்கள்.
மிக்க நன்றி சந்திரவதனா!
ReplyDeletesundaravadivel | Email | Homepage | 06.01.04 - 1:19 am | #
--------------------------------------------------------------------------------
ஐயோ கவியரங்கம் நடத்தியதெல்லாம் பெரியவர்கள். நான் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன் கடைசியில் இரட்டைச் சதம் பறிபோன கவலையில் ஏதோ கிறுக்கினேன் அவ்வளவுதான்
Eelanathan | Email | Homepage | 06.01.04 - 5:44 am | #
--------------------------------------------------------------------------------
அன்பின் சந்திரவதனா,
நாங்கள் கவிகள் அல்ல, மனிதர்களே
அவற்றினைக் கவிகள் என்று சொல்வது முழுக்க முழுக்கச் சரியாகுமா தெரியவில்லை
-/r. | Email | 06.02.04 - 7:46 pm | #
--------------------------------------------------------------------------------
ரமணீதரன்
இப்போதெல்லாம் கவிதை என்று சொல்லி எதையெதையெல்லாமோ எழுதுகிறார்கள்.
சுந்தரவடிவேலின் பக்கத்த்தில் நீங்கள் எல்லோருமாக எழுதியவைகள்
எதுகை மோனை பிசகாது சந்தம் கொண்டு அழகிய கவிதைகளாகவே எனக்குத் தெரிகின்றன.
நட்புடன்
சந்திரவதனா
சந்த&# | Email | Homepage | 06.03.04 - 6:54 am | #
This comment has been removed by a blog administrator.
ReplyDelete