டுபுக்கு கமராவுக்கு பிலிம் வேண்டாமல் பிறந்தநாள் கொண்டாடினதை வாசிக்க எனக்கும் ஒரு ஞாபகம் வந்தது.
அது 78ம் ஆண்டு. எனது கணவரின் சகோதரிக்கு திருக்கேதீஸ்வரத்தில் திருமணம்.
மிக நெருங்கிய உறவினர்களுடன் தாலி கூறை பலகாரங்களும் கொண்டு இரண்டு மூன்று கார்களில் பயணமானோம்.அங்கு தங்கி பாலாவியாற்றில் குளித்து தாலி கட்டி......... மிகவும் சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன. எல்லாச் சந்தோசங்களையும் எனது கணவர், மைத்துனர் என்று கமராவுக்குள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
திருமணம் முடிந்து திரும்பிய போது எனது கணவரே இரண்டு Films ஐயும் கழுவக் கொடுப்பதாகத் தீர்மானித்துஅவை எனது சூட்கேசுடன் எனது வீட்டுக்கு வந்து விட்டன. வீட்டுக்கு வந்ததும் சூட்கேசைத் திறந்து ஏதோ எடுத்து விட்டு நான் திரும்ப முன்
எனது மகன் (1வயதுதான்)மின்னல் வேகத்தில் Film சுருளின் நுனியைப் பிடித்து இழுத்து விட்டான்.நான் விக்கித்து அதைக் கையில் எடுக்கவும் மற்றையதையும் அவன் இழுத்து நிலத்தில் போடவும் சரியாக இருந்தது.
எனது கவலைக்கு மேலால் குறை கேட்க வேண்டியதாயிற்று.
இன்று வரை எனது கணவரின் சகோதரியின் திருமணத்துக்குச் சான்றாக எந்தப் புகைப்படமும் இல்லை.
No comments:
Post a Comment