Saturday, June 26, 2004
வலைவலம் 26.6.2004
எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம். அப்புறம் கதையை வெட்டி விட்டார்கள், சிதைத்து விட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் கதை கெட்டு விடும் என்கிற மாதிரி நறுக்கென்று எழுதிப் பழக வேண்டும்.
இதை நான் சொல்லவில்லை.
இது ராஜேஸ்குமாரிடம் இருந்து சத்யராஜ்குமார் கற்றுக் கொண்டது.
என்னை எழுதியவர்கள் என்று சத்யராஜ்குமார் தமிழ்ஓவியத்தில் தரும் சுயசரிதமே ஒரு சுவையான கதையாகத் தொடர்கிறது.
No comments:
Post a Comment