Tuesday, July 13, 2004

வலைவலம் - 13.7.2004


ஷ்ரேயாவின் பழைய குருடி கதவைத் திறடி மாதிரி ஒன்று..
எனக்குத் தெரிந்த இளம் பெண்ணெருத்தி கர்ப்பமா இருக்கிறா.
அவவுக்கு பொம்பிளைப் பிள்ளைதான் என மருத்துவர் சொல்லி விட்டார்.
என்னிடம் நல்ல தமிழப் பெயரா செலக்ட் பண்ணித் தரச் சொன்னா.
"முல்லை " என்றேன்.
"ஐயோ அதென்ன முள்ளு எண்டு.
எனக்கு அந்தப் பெயர் வேண்டாம்" என்றா.
"அலை" என்றேன்.
"ஐயோ என்ரை பிள்ளையை அலையச் சொல்லுறிங்களோ?
அதுவும் வேண்டாம்" என்றா.

குரல் இதழ் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
திசைகள் மாலன் அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியாக ஆவணி மாதம் வாரமொருமுறை ஒரு குரல் இதழைத் தர முயற்சிக்கிறாராம். பார்ப்போமே...! இல்லை கேட்போமே..!

சோடா பாட்டில் கேள்விப் பட்டிருக்கறீங்களா? நானும் ஏதோ அடிபிடிப் பிரச்சனைகாரனாக்கும் என்று நினைத்துக் கொண்டு போனேன். ஹட்சன் நதிக் கரையிலிருந்து இவ் வார வலைப்பூ ஆசிரியராக வந்திருக்கிறார். தமிழ் வலைப்பதிவுகளில் எந்தெந்த விஷயங்கள் பேசப் படுகின்றன? எதெல்லாம் பேசப் படுவதில்லை? என்று ஒரு unscientific ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார். நீங்களே நேரே போய்ப் பாருங்கோ. சோடாப்போத்தல் ஏதாவது தலையிலை விழுந்தால் நான் பொறுப்பில்லை.

ஜெயந்தியின் நுடம் சிறுகதைக்கு அமரர் கல்கி நினைவுப் போட்டியில் முதற் பரிசு கிடைத்திருக்கிறது. ஜெயந்தி எமக்கெல்லாம் அறிமுகமானவர்தான். சில வாரங்களுக்கு முன் வலைப்பூ ஆசிரசியராகவும் இருந்தார். தோழியரிலும் இவரது ஆக்கங்களைக் காணலாம். இன்னும் சமச்சார், திண்ணை, திசைகள், தமிழ்ஓவியம்... என்று பல்வேறு தளங்களில் இவரது
படைப்புக்கள் உள்ளன.

No comments:

Post a Comment