Tuesday, August 10, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக் காலம்


நினைத்தாலே மனசு குருதி வடிக்கும் விதமாக அமைதி காக்க என்று சொல்லி வந்திறங்கிய இந்திய இராணுவம் எம் மண்ணில் ஆடி விட்டுச் சென்ற அகோரத் தாண்டவம் பற்றியும், செய்து விட்டுச் சென்ற அநியாயங்களினாலான ஆறாத வடுக்கள் பற்றியும்,எழுதி முடிக்க முடியாது.

செய்ததையும் செய்து விட்டு தாம் எதற்காகப் போனோம் என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையை இராணுவம் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ சொல்லாமல், மாறாக எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றனர் என்பது பற்றி வீரப்பிரதாபம் செய்திருக்கிறார்கள் என்பதை சுந்தரவடிவேலின் பதிவின் மூலம் அறிந்த போது இன்னும் மனசு கொதிக்கிறது.

இன்னும் இவர்களது வெறியாட்டம் பற்றி கரிகாலனும், ஈழநாதனும்
பதிந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment