Saturday, February 12, 2005

நண்டுகள்


உதவி செய்யப் போய் உபத்திரவங்களை வாங்கிக் கொண்ட அனுபவம் குறிப்பாகப் புலம் பெயர்ந்த பலருக்கும் இருக்கும். புலம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் தாங்கள் அனுபவித்த தனிமைகளையும், பாஷைப் பிரச்சனைகளையும், உதவிகள் இல்லாத தன்மைகளையும் மனதில் கொண்டு... தொடர்ந்த காலங்களில்

புலம் பெயர்ந்து வந்தவர்களை தாமே போய்ச் சந்தித்து வில்லங்கமாக வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து...
பின்னர் பட்டிருககிறார்கள்.

உறவினர்களைத் தெரிந்தவர்களை என்று தாமே பொறுப்பேற்று அழைத்து அவர்களைச் சரியான முறையில் பதியும் வரை தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்து விட்டு......
பின்னர் முழித்திருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ பதிவுக்கு ஒரு இடம் வேண்டுமென்ற யாராவது மன்றாடும் போது பாவம் பார்த்து வீட்டில் பதிந்து விட்டு.. இருக்க விட்டால் சிறிதளவு பணமும் கிடைக்கும் என்ற ஆசையில் வீட்டுக்குள் விட்டு விட்டு...
தாம் நடுத்தெருவில் நின்றிருக்கிறார்கள்.

இப்போது ஷ்ரேயாவும் மிகவும் பட்டிருக்கிறார்..

No comments:

Post a Comment