இன்று தீபத்தில் "காதலே நிம்மதி" படம் போட்டார்கள். படம் தொடங்கி 15 நிமிடங்களின் பின்தான் எதேச்சையாகத் தொலைக்காட்சியின் முன் போனேன். நாசரும் மனைவியும் கோயிலுக்குள் கும்பிட, கதாநாயகி நாசரின் குட்டி மகளுடன் ஒழிந்து விளையாட.. படத்தைப் பார்க்கும் எண்ணமும் வந்தது. படம் சொல்ல வந்த விடயம் பிடித்திருந்தது.
பெற்றோர்கள் என்ன ஏது என்று ஆராயாது எடுத்த உடனேயெ பருவ வயதுப் பிள்ளைகள் மேல் சந்தேகப் படுவதும் அதனால் வந்த சிக்கல்களுமே படமாக்கப் பட்டிருந்தது. பிள்ளைகள் யாரோடு பேசினாலும் யாரோடு சிரித்தாலும் எப்போதுமே சந்தேகக் கண்களுடன் பார்க்கும் பெற்றோருக்குப் படிப்பினையான ஒரு படம்.
No comments:
Post a Comment