Sunday, February 13, 2005

புனைபெயரில் எழுதுகிறீர்களா?


புனைபெயரில் எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர்களைச் சாடவும், எழுத்துக்களால் மற்றவர்களை வெட்டவும், கொத்தவுமே சிலர் புனைபெயர்களைப் பாவிக்கிறார்கள். சிலரோ புனைபெயரால் சமூகத்துக்குத் தேவையான பல விடயங்களைச் சொல்கிறார்கள். சிலர் தம்மீது தமக்கே நம்பிக்கையில்லாமல் புனைபெயரில் எழுதுகிறார்கள். இப்படிப் பல காரணங்கள் புனைபெயரில் எழுதுபவர்களிடம் உண்டு.

புனைபெயரில் எழுதுபவர்களை முகமூடிகள் பயந்தாங்கொள்ளிகள்... என்றெல்லாம் சிலர் சாடுகிறார்கள்.

இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
நீங்கள் புனைபெயரில் எழுதுகிறீர்களா?
எழுதினால் அதற்கான காரணம் என்ன?

8 comments:

  1. வாழ்த்துக்கள் ச.வ!! ்)
    புனைபெயரில் எழுதுவதால்.. வாசகனின் முற்கோபத்தை அல்லது உடனேயெழும் உணர்வுகளை ஓரளவாவது விலத்த முடியும்.. :)

    ReplyDelete
  2. நான் ரெண்டு தளத்தில வேறவேற பேரில எழுதிறன். சும்மா தான். ஏலுமெண்டாக் கண்டுபிடியுங்கோ பாப்பம். ஆரன் சரியாக் கண்டுபிடிச்சா நான் உடன வெளியிடுவன். ("உன்ர எழுத்தின்ர திறத்தில" எண்டு முணுமுணுக்கிறது கேக்குது)

    ReplyDelete
  3. புனை பெயரில் எழுதுவதால் பல நன்மைகள் உண்டு. நாம எழுதிறதை நான் தான் எழுதினேன் என்று சொல்லும் போது அது பற்றிய உண்மையான விமர்சனத்தை நண்பர்களிடம் பெற முடியாது. புனைபெயரில் எழுதினால், உண்மையை அப்படியே உளறுவார்கள். அதை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி தான். நல்லாய் விமர்சிக்கிறார்களோ இல்லை படுமோசமாய் விமர்சிக்கிறார்களோ ஆனால் உண்மை தான் வேண்டும்.

    ReplyDelete
  4. ஏன் என்று தெரியவில்லை. ஆரம்பிக்கும்பொழுது சும்மானாச்சும்(அவசரத்தில்) ஒரு பெயர் எருதான் இதை வைத்துக் கொண்டேன். இப்பொழுது இந்த பெயர் ஏனோ பிடித்துப் போய் விட்டது!?!?

    ReplyDelete
  5. ஒன்று- எழுதுபவர் குறித்தான விம்பம் அவரின் எழுத்தின் மூலமாகவோ அல்லது அவரின் பெயரின் மூலமாகவோதான் வாசகனுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் யார் சொல்லுகிறார், சிறியவரா பெரியவரா என்கின்ற பக்கம் போகாமல் என்ன சொல்கிறார் என்பது முன் நிறுத்தப்படும்.

    இரண்டு- எழுதியதற்கு மாற்றுக் கருத்து பேசுபவர்கள் குறித்துப் பிரச்சனை கிடையாது. அவர்களைப் பேனா மூலம் சந்திக்கலாம். முதுகில் துப்பாக்கி வைப்பதாக இருந்தால் ?. தேவையான உயிர் தேவை இல்லாமல் போகும்.

    மூன்று- ஏற்கனவே எமக்கு முன்னே உள்ளோர் காட்டிய பழக்கமாக இருக்கலாம். அதாவது பெயர் முதற் கொண்டு நாடியில் கை வைத்துப் புகைப்படம் எடுப்பது வரை. (நான் எடுத்தால் வாழோடுதான் படம் எடுக்கவேண்டும்)

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. வன்னியன் said:நான் ரெண்டு தளத்தில வேறவேற பேரில எழுதிறன். சும்மா தான். ஏலுமெண்டாக் கண்டுபிடியுங்கோ பாப்பம். ஆரன் சரியாக் கண்டுபிடிச்சா நான் உடன வெளியிடுவன். ("உன்ர எழுத்தின்ர திறத்தில" எண்டு முணுமுணுக்கிறது கேக்குது)//////////////

    ____________________



    வன்னியன்
    இன்னும் சில பதிவுகள் உங்களிடமிருந்து வந்த பின் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete