Saturday, February 12, 2005

ஆணென்ன பெண்ணென்ன



இது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக
இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய
ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்
தெரியவில்லை.


ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம்தான்...

நீயும் பத்து மாதம்
நானும் பத்து மாதம்...

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதமில்லை
பார்ப்பதிலே ஏன் பிரிவு...?

3 comments:

  1. பத்து மாதம் என்பது தவறு
    ஒன்பது மாதமும் ஏழு நாட்களும்.
    அதாவது 277 நாட்கள்.

    ReplyDelete
  2. ஆஆஆஆஆஆஆஆஆஆ

    ஆணென்ன பெண்ணென்ன
    நீயென்ன நானென்ன
    எல்லாம் ஓரினம் தான் - அட
    நாடென்ன வீடென்ன
    காடென்ன மேடென்ன
    எல்லாம் ஓர் நிலம் தான்
    நீயும் பத்து மாசம்
    நானும் பத்து மாசம்
    மாறும் இந்த வேஷம்
    ஆணென்ன பெண்ணென்ன
    நீயென்ன நானென்ன
    எல்லாம் ஓரினம் தான் - அட
    நாடென்ன வீடென்ன
    காடென்ன மேடென்ன
    எல்லாம் ஓர் நிலம் தான்
    .
    ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
    உள்ளத்திலே ஏன் பிரிவு
    கண்ணுக்குள்ள பேதம் இல்ல
    பார்ப்பதிலே ஏன் பிரிவு
    பொன்னு பொருள் போகும் வரும்
    அன்பு மட்டும் போவதில்லை
    தேடும் பணம் ஓடிவிடும்
    தெய்வம் விட்டுப் போவதில்லை

    மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
    வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
    மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
    வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
    இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
    இன்னும் மயக்கமா?

    ஆணென்ன பெண்ணென்ன
    நீயென்ன நானென்ன
    எல்லாம் ஓரினம் தான் - அட
    நாடென்ன வீடென்ன
    காடென்ன மேடென்ன
    எல்லாம் ஓர் நிலம் தான்
    .
    .
    சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா
    சொத்து சுகம் தேவையில்லே
    பந்தம் விட்டுப் போச்சுதுன்னா
    வாழ்வதிலே லாபம் இல்லே
    எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா
    இன்றும் என்றும் சோகம் இல்லே
    கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சு
    காணும் சுகம் ஏதுமில்லே

    ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
    வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே
    ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
    வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே
    இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
    இன்னும் மயக்கமா?

    ஆணென்ன பெண்ணென்ன
    நீயென்ன நானென்ன
    எல்லாம் ஓரினம் தான் - அட
    நாடென்ன வீடென்ன
    காடென்ன மேடென்ன
    எல்லாம் ஓர் நிலம் தான்
    நீயும் பத்து மாசம்
    நானும் பத்து மாசம்
    மாறும் இந்த வேஷம்
    ஆணென்ன பெண்ணென்ன
    நீயென்ன நானென்ன
    எல்லாம் ஓரினம் தான் - அட
    நாடென்ன வீடென்ன
    காடென்ன மேடென்ன
    எல்லாம் ஓர் நிலம் தான்
    ~~~~~~~~~~~~~
    படம்:- தர்மதுரை;
    ரிலீஸ்:- 14th ஜனுவரி 1991;
    இசை:- இளையராஜா;
    பாடல்:- கங்கை அமரன்;
    பாடியவர்:- SPB;
    நடிப்பு:- ரஜினிகாந்த்.
    ~~~~~~~~~~~~~

    ReplyDelete
  3. மிகவும் நன்றி கந்தசாமி!

    ReplyDelete